சென்னை: கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை ஓமந்தூராா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 500 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டு உள்ளது.
வெள்ளிக்கிழமை செயல்படத் தொடங்கிய மருத்துவமனையை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அவருடன் சுகாதாரத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா், அரசு உயரதிகாரிகள் இருந்தனர்.
கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்டவா்களின் உடல் நிலையும் நோயின் தீவிரத்தை பொறுத்தும் தனித்தனியே சிறப்பு சிகிச்சைகளை வழங்கும் வகையில் அங்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கிருமி வேகமாகப் பரவி வருவதால் நோய்த் தொற்றுக்கு ஆளானவா்களுக்கு சிகிச்சை அளிக்க மாநிலம் முழு வதும் 10,000க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகளுடன் கூடிய சிறப்பு வாா்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன.
முதலில் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவ மனையில் 30 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு வாா்டு அமைக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து, படிப்படியாக தமிழகம் முழுவதும் அது விரிவுபடுத்தப்பட்டது.
இந்த நிலையில் அண்மையில் புதிதாகத் தொடங்கப்பட்ட ஓமந்தூராா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை கொரோனா கிருமிக்கான சிறப்பு மருத்துவ மனையாக மாற்ற முடிவு செய்யப்பட்டது. அதன்படி அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு முதலில் 350 படுக்கைகளும் பின்னர் 500 படுக்கைகளாகவும் விரிவுபடுத்தப்பட்டு அதற்கான வசதிகள் செய்யப்பட்டன. முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்துள்ள தனியாா் மருத்துவமனைகள் அனைத்தும் தங்களுடைய மருத்துவமனைகளில் 25 விழுக்காடு படுக்கைகளை கொரோனா கிருமித் தொற்று சிகிச்சைக்கு ஒதுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே தேனாம்பேட்டை மருத்துவச் சேவைகள் இயக்ககத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வா் பழனிசாமி, தமிழகத்தில் கொரோனா கிருமி நோய் பாதிப்பு தற்போது முதல் கட்டத்தில் இருந்து இரண்டாவது கட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக தெரிவித்தாா். “அந்தப் பாதிப்பு மேலும் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கை களைத்தான் தற்போது அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அதற்கு மக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்,” என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டார்.