தடை உத்தரவு: 100,000 பேர் தவிப்பு; அரசுக்கு அவசர கோரிக்கை

சென்னை: கொரோனா கிரு­மித்­தொற்றைக் கட்­டுப்­ப­டுத்தி அவற்றை ஒழிக்­கும் முயற்­சி­யாக தமி­ழ­கத்­தில் இப்­போது 21 நாள் ஊர­டங்குக் கட்­டுப்­பாடு நடப்­பில் இருக்­கிறது.

அந்­தக் கட்­டுப்­பாடு கார­ண­மாக மாநி­லத்­தில் சுமார் 100,000 பேர் உண­வின்றி தவிக்­கும் நிலை ஏற்­பட்டு இருப்­ப­தா­க­வும் தேவை­யான அள­வுக்­குக் கட்­டுப்­பா­டு­களைத் தளர்த்தி உட­ன­டி­யாக அவர்­க­ளுக்கு அரசு உதவ வேண்­டும் என்­றும் தொண்­டூ­ழிய அமைப்­பு­கள் கோரிக்கை விடுத்துள்ளன.

தடை உத்­த­ரவு கார­ண­மாக பாதிக்­கப்­பட்டு இருப்­போ­ரில், பிள்ளை­க­ளால் கைவி­டப்­பட்ட பெற்­றோர்­கள், வீடு­களில் இருந்து விரட்­டி­ய­டிக்­கப்­பட்ட மன­நோ­யா­ளி­கள், வீடற்ற மக்­கள், உழைத்து பிழைக்க இய­லாத மாற்­றுத் திற­னா­ளி­கள் போன்ற பல­ரும் அடங்­கு­வர் என்று தொண்­டூ­ழிய அமைப்­பு­கள் தெரி­வித்து இருக்­கின்­றன.

சென்­னை­யில் இப்­ப­டிப்­பட்ட 15,000 பேர் உண­வின்றி தவிப்­ப­தா­க­வும் மாநி­லம் முழு­வ­தும் மொத்­தம் 100,000க்கும் மேற்­பட்­டோர் கடும் பாதிப்­புக்கு இலக்­காகி இருப்­ப­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

அவர்­களில் பலர் உட­லில் போதிய தெம்பு இன்றி சாலை ஓரங்­க­ளி­லும் இதர பகு­தி­க­ளி­லும் படுத்த படுக்­கை­யா­கக் கிடப்­ப­தால் அவர்­க­ளுக்கு உதவ நினைத்­தும் தடை உத்­த­ரவு கார­ண­மாக தொண்­டூ­ழிய நிறு­வ­னங்­க­ளால் உதவ முடி­ய­வில்லை என்­றும் கூறப்­ப­டு­கிறது.

மனி­தர்­கள் ஒரு­பு­றம் இருக்க, தெருக்­களில் திரி­கின்ற நாய், பூனை, கால்­ந­டை­கள் உள்­ளிட்ட விலங்­கு­களும் உண­வின்றி தவிப்­ப­தா­க­வும் சில இடங்­களில் விலங்கு­கள் மடிந்­து­விட்­ட­தா­க­வும் தக­வல்­கள் கூறு­கின்­றன.

தடை உத்­த­ரவு இருந்­தா­லும் வீடற்ற முதி­யோர், மன­நிலை பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் போன்­ற­வர்­கள் காப்­ப­கத்­தில் பாது­காப்­பாக வைக்­கப்­ப­டு­வார்­கள் என்று அர­சாங்­கம் தெரி­வித்து இருக்­கிறது என்­றாலும் இன்­ன­மும் அவர்­களில் பல­ரும் சாலை­க­ளி­லேயே பொழு­தைக் கழிப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

அவர்­க­ளுக்கு நேர­டி­யாக உணவு வழங்­கக் கூடாது என்று கட்­டுப்­பா­டு­கள் விதிக்­கப்­பட்டு இருப்­ப­தால் தொண்­டூ­ழிய நிறு­வ­னங்­கள் தவிப்­ப­தா­க­வும் ஆகை­யால் அர­சாங்­கம் உட­ன­டி­யா­கக் கட்­டுப்­பா­டு­க­ளைத் தளர்த்த வேண்­டும் என்­றும் அத்­த­கைய அமைப்­பு­கள் கோரிக்கை விடுத்­துள்­ளன.

இந்த நில­வ­ரம் பற்றி கருத்து கூறிய சில தொண்­டூ­ழிய அமைப்­பு­கள், இத்­த­கைய ஆத­ர­வற்ற மக்­களில் பலர் இரண்டு நாட்­க­ளா­கப் பட்­டினி கிடக்­கி­றார்­கள் என்று கூறுகின்றன. ஆகை­யால் அவர்­களுக்கு உட­னடி உதவி தேவை என்று அந்த அமைப்­பு­கள் அவ­சர குரல் கொடுத்து வரு­கின்­றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!