தமிழகத்துக்குள் ஊடுருவும் வெளிமாநில மக்கள்: கண்காணிக்க கோரிக்கை

தமிழகத்துக்குள் ஊடுருவும் வெளிமாநில மக்கள்: கண்காணிக்க கோரிக்கை

1 mins read
269a41ef-2054-4128-8987-644232672dc9
திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தின் வருகையாளர்களின் கைகளில் கிருமி நாசினி தெளிக்கும் சுகாதார அதிகாரிகள். படம்: தி இந்து -

கொடைக்­கா­னல்: கொடைக்­கா­னல் மலை­ கி­ரா­மங்­கள் வழி­யாக கேர­ளா­வைச் சேர்ந்த சிலர் தமி­ழ­கத்­திற்­குள் ஊடு­ருவி­ வ­ரு­கின்­ற­னர்.

அவர்­களைக் கண்­கா­ணிக்க வனத்­துறை அதி­கா­ரி­கள் நட­வடிக்கை எடுக்­க­வேண்­டும் என மலைக் கிராம மக்­கள் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

திண்­டுக்­கல் மாவட்­டம் கொடைக்­கா­னல் மேல்­ம­லைப்­ப­குதி கிரா­மங்­கள் கேரள மாநில எல்­லை­யில் உள்­ளன. கொடைக்­கா­ன­லில் இருந்து கேரள மாநி­லத்­தின் மூணாறு பகு­திக்­குச் செல்ல திண்­டுக்­கல் மாவட்­டம் கிளா­வரை வழி­யாக இருந்த சாலை வசதி பின்­னர் மூடப்­பட்­டது.

தமி­ழக-கேரள எல்­லை­களை ஒட்­டி­யுள்ள மலைக்­ கி­ரா­மங்­கள் வழி­யாக கேர­ளாவைச் சேர்ந்த சிலர் இப்­போது தமி­ழ­கப் பகு­திக்­குள் ஊடு­ரு­வி­ வ­ரு­கின்­ற­னர்.

இத­னால் கேர­ளா­வில் உள்ள கொரோனா கிருமித் தாக்­கம் தமிழகப்­ ப­கு­தி­யில் உள்ள கொடைக்­கானல் மலைக் ­கி­ராம மக்­க­ளுக்­கும் பரவ வாய்ப்­புள்­ள­தாக மக்­கள் தெரி­விக்­கின்­ற­னர்.

கொடைக்­கா­னல் மேல்­மலை கிரா­மங்­களில் இருந்து 10 கிலோ மீட்­டர் நடந்து சென்­றால் கேரள மாநி­ல­ எல்லை உள்­ளது. எனவே கேரள மாநி­லத்­தில் இருந்து காட்டுப்­பகுதி வழி­யாக எளி­தில் தமி­ழக மலைக்­ கி­ரா­மங்களுக்குள் நுழைந்து­வி­ட­மு­டி­யும். இதைத்­த­டுக்க காட்டுவளத் துறையினர் மாநில எல்லைப் பகு­திகளில் தீவிர கண்­கா­ணிப்புப் பணி­யில் ஈடு­ப­ட­வேண்­டும். இத­னால் கொரோனா கிருமிப் பாதிப்பைத் தடுக்­க­லாம் என மலை­ கி­ரா­ம­ மக்கள் வலி­யு­றுத்­தி­யுள்­ள­னர்.