முதல்வர்: மக்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்

முதல்வர்: மக்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்

2 mins read
0607f3a5-28f2-4e8a-a97d-ab595c1a93e9
சென்னை மயிலாப்பூர், காமராசர் சாலை, பட்டினப்பாக்கத்தில் இயங்கி வரும் அம்மா உண வகங்களில் பசியாற வந்திருந்த ஏழை, எளிய மக்க ளிடம் உணவின் தரம், சுவை குறித்து நேரடி யாகக் கேட்டறிந்த தமிழக முதல்வர் பழனிசாமி, தானும் அம்மா உணவக உணவை சுவைத் துப் பார்த்தார். படம்: தமிழக ஊடகம் -

சென்னை: கொரோனா கிருமி ஏற்­ப­டுத்­தும் பாதிப்­பு­கள் புரி­யா­மல் மக்­கள் அலட்­சி­ய­மாக அங்­கு­மிங்­கும் திரிந்து வரு­கின்­ற­னர். மக்­கள் ஒத்­து­ழைப்பு அளித்­தால்­தான் இக்­கி­ருமி மேலும் பர­வா­மல் தடுக்க முடி­யும் என்று முதல்­வர் எடப்­பாடி பழ­னி­சாமி கூறி­யுள்­ளார்.

நாடு முழு­வ­தும் ஊர­டங்கு உத்­த­ரவு இம்மாதம் 14ஆம் தேதி வரை அம­லில் இருக்­கும் என்­ப­தால் வீடற்­றவர்­கள், சாலையோர மக்­கள், தொழி­லா­ளர்­கள், வறு­மைக்கோட்­டுக்கு கீழ் வாழும் அடித்­தட்டு மக்­கள் உள்­ளிட்ட பலரும் ேபாதிய உணவின்றி அல்லல்பட்டு வரு­கின்­ற­னர்.

பெரும்­பா­லான உண­வ­கங்­கள் அமர்ந்து சாப்­பி­டும் சேவையை நிறுத்திவைத்­துள்ள நிலை­யில், தமி­ழ­கம் முழு­வ­தும் அம்மா உண­வ­கங்­கள் மட்­டும் வழக்­கம்போல் செயல்­பட்டு வரு­கின்­றன.

இந்­நி­லை­யில், சென்னை சாந்­தோம், கலங்­கரை விளக்­கம் பகு­தி­யில் உள்ள அம்மா உணவகங்­களில் ஆய்வு நடத்திய முதல்­வர், உண­வின் தரம், ஊழி­யர்­கள் சுகா­தா­ர­மான முறை­யில் உணவு சமைக்­கி­றார்­களா என்­ப­து குறித்தும் ஆய்வு செய்­தார்.

இதன்பின்­னர் செய்­தி­யா­ளர்­க­ளைச் சந்­தித்த முதல்­வர், "மக்­க­ளின் ஒவ்­வொரு உயி­ரும் அர­சுக்கு முக்­கி­யம். எனவே அர­சின் சட்­டத்தை மதித்து மக்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.

"கொரோனா கிரு­மி­யால் பாதிக்­கப்­ப­டு­வோ­ருக்கு சிகிச்சை அளிப்­ப­தற்­காக தமி­ழ­கத்­தில் 17,000 படுக்­கை­ வசதிகள் தயார் நிலை­யில் உள்­ளன. இங்கு இக்கிருமி பாதிப்பால் 124 பேர் சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர்.

"டெல்லி மாநாட்­டில் பங்­கேற்ற வர்­க­ளின் விவ­ரம் தெரி­யா­த­தால் அவர்­கள் தாங்­க­ளா­கவே முன்­வந்து தக­வல் தெரிவித்­தால் உரிய சிகிச்சை அளிக்­கப்­படும்.

"நோயின் தீவி­ரம் தெரி­யா­மல் மக்­கள் வெளியே நட­மா­டு­கின்­ற­னர். மக்­கள் ஒத்­து­ழைப்பு அளித்­தால்தான் இக்­கி­ருமி பர­வ­லைத் தடுக்கமுடி­யும். ஒவ்­வோர் உயி­ரும் அர­சுக்கு முக்­கி­யம் என்பதால் ­தான் 144 தடை உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

"தமி­ழ­கத்­தில் ஏப்­ரல் 14ஆம் தேதிக்குப் பிறகு ஊர­டங்கு நீட்­டிக்­கப்­ப­டுமா என்­பது குறித்து மத்­திய அரசுதான் முடிவு செய்­யும்," என்று கூறி­னார்.