சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றத்திற்காக 28,897 பேர் மீது வழக்குகள் பதிவு செய்துள்ள போலிசார், 33,006 பேரைக் கைது செய்துள்ளனர்.
கைதானவர்களில் சிலருக்கு உடற்பயிற்சி, கொரோனா குறித்து தேர்வு எழுதும் தண்டனை வழங்கப் பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்ட தாகவும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாகன ஓட்டிகள், தேவையின்றி வெளியில் சுற்றியவர்களிடம் இருந்து ரூ.13.99 லட்சம் அபராதம் வசூல் செய்துள்ளதுடன் 23,691 வாகனங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.
பூந்தமல்லியில் ஊரடங்கு உத்தரவை மீறி பிடிபட்ட இளைஞா்களை உடல் வலியினால் அவர்கள் தளா்வடையும் வரையில் போலிசார் உடற்பயிற்சி செய்யவைத்தனா். இத்தண்டனைக்குப் பிறகு போலிசார் விடுவித்ததும் இளைஞா்கள் அங்கிருந்து தலைதெறிக்க ஓடினா்.
இதேபோல புளியந்தோப்பில் ஊரடங்கு உத்தரவை மீறி வாக னங்களில் உலா வந்த இளை ஞா்களைப் பிடித்த போலிசார் அவா்களது முட்டி வலி எடுக்கும் வரையில் தோப்புக்கரணம் போட வைத்து திகைக்கவைத்தனா்.
வியாசா்பாடியில் ஊரடங்கு உத்தரவை பின்பற்றும்படி போலிசாா் பாடிய கானா பாடல் ஒலிபெருக்கி மூலம் ஒலிபரப்பப்படுகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறுவோரை போலிசார் பிடித்து, அவா்களுக்கு கொரோனா குறித்த கேள்விகள் அடங்கி வினாத்தாளை கொடுத்து தோ்வு எழுத வைக்கின்றனா்.
இதன்மூலம் ஊரடங்கை மீறுவோருக்கு தண்டனை வழங்கப்படுவதோடு, கொரோனா குறித்த விழிப்புணா்வையும் ஏற்படுத்துவதாக போலிசார் தெரிவிக்கின்றனா்.
திருநெல்வேலியில் ஊரடங்கு உத்தரவை மீறுவோரை தமிழ்த்தாய் வாழ்த்தும் திருக்குறளும் கூற வைத்து அறிவுரை வழங்குகின்றனா்.

