சென்னை: தமிழகம் முழுவதும் கொேரானா கிருமித்தொற்று பரவும் அபாயம் இருப்பதாக சுகாதாரம், நோய்த் தடுப்பு மருந்துத்துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் 234 பேருக்கு கொரோனா கிருமி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பொது சுகாதாரம், நோய்த் தடுப்பு மருந்துத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொேரானா நோய், ஒரு தொற்றுநோயாக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிவு 76ன்படி தமிழ்நாடு எங்கும் கொேரானா தொற்று பரவும் அபாயமுள்ள பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
“அடுக்குமாடி குடியிருப்புகள், பள்ளிகள், கல்லூரிகள், திருமண மண்டபங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட இடங்களுக்கு வரு பவர்களை அவர்கள் தங்கள் கைகளை நன்கு கழுவிய பிறகே அனுமதிக்கவேண்டும். அரசு, தனி யார் மருத்துவமனைகளை அவ்வப்பொழுது முழுவதுமாக கிருமி நாசினியைக் கொண்டு சுத்தம் செய்து நோய்த்தொற்று ஏற்படாத வகையில் பராமரிக்கவேண்டும்.
“நோய்த்தொற்று நடவடிக்கைகளை எடுக்கத் தவறும் மருத்துவமனைகள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.