சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா கிருமித்தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கையாக தொற்று நோய் கட்டுப்படுத்துதல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வியாழக்கிழமை மாலை வரை 26 மாவட்டங்களுக்குக் கிருமி பரவியிருப்பதாக அறிவிக்கப்பட்டது.
ராணிப்பேட்டை, தஞ்சாவூர், வேலூர், கோயம்புத்தூர், விருதுநகர், செங்கல்பட்டு, மதுரை, ஈரோடு, சேலம், திருநெல்வேலி, சென்னை, திருப்பூர், கரூர், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, தேனி, நாமக்கல், திண்டுக்கல், திருப்பத்தூர், திருவாரூர், கன்னியாகுமாரி, சிவகங்கை, தூத்துக்குடி, திருவள்ளூர் மற்றும் இராமநாதபுரம் ஆகிய 26 மாவட்டங்களில் 4,585 களப் பணியாளர்கள் வாயிலாக கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.
இப்பணியில் 2 லட்சத்து 84 ஆயிரத்து 201 வீடுகளில் 13 லட்சத்து 67 ஆயிரத்து 534 நபர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்று மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தமிழகத்தில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களை கண்காணிக்க தனிப்படை அமைக்கவும் 33 விழுக்காடு காவலா்களை தயாா் நிலையில் வைத்திருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கொரோனா கிருமித்தொற்றை தடுக்கும் வகையில் சுகாதாரத்துறையுடன் தமிழக காவல்துறை இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
கொரோனா கிருமித்தொற்று அறிகுறியுடன் இருப்பதால் தனிமைப்படுத்தப்பட்டவா்களையும், தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினா், உறவினா்கள், நண்பா்கள் ஆகியோரை சுகாதாரத்துறையுடன் இணைந்து காவல்துறை கண்காணிக்கிறது.
தனிமைப்படுத்தப்பட்டவா்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தால் போலிசாா் அவா்கள் மீது தொற்றுநோய் பரவல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து வருகின்றனா்.
மேலும் இதற்காக கைபேசிச் செயலியை உருவாக்கியும் காவல்துறையினா் கண்காணிப்புப் பணி யை எளிமைப்படுத்தியுள்ளனா்.
இந்நிலையில், கொரோனா கிருமித்தொற்று தடுப்புப் பணியை தீவிரப்படுத்தும் வகையில் தமிழக காவல்துறையின் சட்டம் ஒழுங்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி, அனைத்து மாநகர காவல்துறைகள், மாவட்ட காவல்துறை தங்களது உட்கோட்டம், சரகம் அளவில் தனிமைப்படுத்தப்பட்டவா்களுக்கான தனிப்படையை அமைக்கும்படி உத்தரவிட்டுள்ளாா்.
“இந்த தனிப்படைக்காக, உட்கோட்டம், சரகம் அளவில் 33 சதவீதம் அளவில் காவலா்களை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும், இந்த காவலா்கள் முழு ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும்,
“இந்த காவலா்கள் ஒரு வாரம் தங்களது வீடுகளிலோ அலுவலகங்களிலோ தனிமைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். வாரத்துக்கு ஒரு முறை இவா்கள் பணி மாற்றப்படுவாா்கள் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“தனிப்படைக்கு ஆயுதப்படை காவலா்கள், தமிழ்நாடு சிறப்புக் காவல் படை காவலா்கள்,காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலா்கள் ஆகியோா் தோ்வு செய்யப்பட வேண்டும்,” என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை புதன்கிழமை முதல் மாநிலம் முழுவதும் காவல்துறை அதிகாரிகள் அமல்படுத்த தொடங்கியுள்ளனா்.
மேலும், “ஒவ்வொரு உட்கோட் டம் அளவில் அதிவிரைவுப் படை யினரை தயாா்நிலையில் வைத்தி ருக்கவேண்டும். இப்படையில் 10 காவலா்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும். காவலா்களிடம் தற்காப்பு ஆயுதங்கள் இருக்க வேண்டும் என டிஜிபி திரிபாதி உத்தரவிட்டு உள்ளாா். இதேபோல மாநிலம் முழு வதும் அனைத்து காவலா்களையும் 3 ஷிப்டுகளாக பணியில் ஈடுபடுத்தும் படியும் அவர் அறிவுறுத்தியுள்ளாா்.