மலேசியா, ஜெர்மனி நாடுகளைச் சேர்ந்த 569 பேர் திருப்பி அனுப்பப்பட்டனர்

மலேசியா, ஜெர்மனி நாடுகளைச் சேர்ந்த 569 பேர் திருப்பி அனுப்பப்பட்டனர்

2 mins read

சென்னை: தமி­ழ­கத்­தில் சுற்­றுலா, வேலை போன்ற கார­ணங்­க­ளுக்­காக வந்து கொரோனா ஊர­டங்­கால் சிக்­கிக்­கொண்ட 500க்கும் மேற்­பட்ட ஜெர்­மன் மற்­றும் மலே­சிய நாட்­டி­னர் நேற்று சிறப்பு விமா­னம் மூலம் சொந்த நாட்­டிற்கு அனுப்பி வைக்­கப்­பட்­ட­னர்.

கொரோனா பாதிப்பு நாடு­மு­ழு­தும் எதி­ரொ­லித்த நிலை­யில் கடு­மை­யான தடுப்பு நட­வ­டிக்­கை­களை மத்­திய மாநில அர­சு­கள் எடுத்து ­வ­ரு­கின்­றன. 21 நாள் தேசிய அள­வி­லான ஊர­டங்கு கடை­பி­டிக்­கப்­பட்டு, பொது­மக்­கள் சமு­தாய தனி­மைப்­ப­டுத்­து­தலைக் கடை­பி­டித்து வரு­கின்­ற­னர். அத்­தி­யா­வ­சிய போக்­கு­வ­ரத்து, பொருட்­கள் வரத்து தவிர அனைத்­தும் முடக்­கப்­பட்­டுள்­ளன. அனைத்து போக்­கு­வ­ரத்­து­களும் நிறுத்­தப்­பட்­டன. விமா­னச் சேவை­யும் நிறுத்­தப்­பட்­டது.

தமி­ழ­கத்­தில் வசிக்­கும் மலே­சியா நாட்­ட­வா்­கள் ஊர­டங்­கால் கடு­மை­யாக பாதிக்­கப்­பட்டு தவித்து வந்­த­னர். தங்­களை தங்­கள் நாட்­டுக்கு அனுப்பி வைக்­கும்­படி அவர்­கள் கோரிக்கை வைத்­தி­ருந்­த­னர். மலே­சிய அர­சும் இந்­திய அர­சு­டன் பேசி தங்­கள் நாட்­ட­வரை சிறப்பு விமா­னங்­களில் மலே­சியா அழைத்­துச் செல்ல அனு­மதி கேட்­டது. இதைப் பரி­சீ­லித்த இந்­திய அரசு அதற்கு அனு­மதி அளித்­தது.

இதே­போல் ஜெர்­மன் நாட்­டி­லி­ருந்து வந்­த­வர்­கள் 225 பேர் தங்கள் நாட்­டுக்கு திரும்ப கோரிக்கை வைத்­தி­ருந்­த­னர், இவை­களை பரிசீ­லித்த இந்­திய அரசு அனு­மதி அளித்­தது. மலே­சிய நாட்­டி­னரை அழைத்­துச் செல்ல வியாழன் இரவு மலே­சி­யா­வி­லி­ருந்து மலிண்டா ஏா்லைன்ஸ் நிறு­வ­னத்­தைச் சேர்ந்த 2 விமா­னங்­கள் சென்னை அனைத்துலக விமா­ன­நி­லை­யத்­திற்கு காலி­யாக வந்­தன.

சென்னை, சென்னை புற­நகா் மற்­றும் வடமாவட்­டங்­க­ளி­ல் வசித்த மலே­சி­யா்­கள் 344 போ் சென்னை விமான நிலை­யம் அழைத்து வரப்­பட்டு அனைத்து சோத­னை­க­ளை­யும் முடித்­து­விட்டு நள்­ளி­ர­வில் மூன்று மலே­சிய விமா­னம் மூலம் அடுத்­த­டுத்து மலே­சியா புறப்­பட்டு சென்­ற­னர்.

இதே­போல் இந்­தி­யா­வில் தங்­கி­யி­ருந்த ஜொ்மன் நாட்­ட­வா்­கள் சுமாா் 225 பேரு­டன் ஏா் இந்­தியா தனி விமா­னம் நேற்று காலை 7 மணிக்கு சென்­னை­யி­லி­ருந்து மும்பை வழி­யாக ஜொ்மன் நாட்­டின் பிராங்­ஃபர்ட் நக­ருக்கு புறப்­பட்டு சென்­றது. நேற்று அதி­காலை பல்­வேறு பகு­தி­க­ளி­லி­ருந்து 10 சொகுசு பேருந்­து­களில் 225 பேரும் சென்னை விமா­ன­நி­லை­யத்­திற்கு அழைத்து வரப்­பட்­டனா்.

அனை­வ­ருக்­கும் மருத்­துவ பரிசோ­த­னை­கள் நடத்­தப்­பட்டு உட­மை­களில் கிரு­மி­நா­சினி தெளிக்­கப்­பட்டு பின்பு விமா­னத்­தில் அனுப்­பப்­பட்­டனா். ஏற்­க­னவே முதல் விமா னம் கடந்த 31ஆம் தேதி சென்னை, ஹைத­ரா­பாத், மும்­பை­யி­லி­ருந்த 350 ஜொ்மனி­யா்­க­ளு­டன் பிராங்பாா்ட் சென்­றது. நேற்று சென்­றது 2வது விமா­னம் ஆகும்.

இதன் மூலம் நேற்று ஒரே நாளில் சென்­னை­யி­லி­ருந்து 569 மலே­சி­யா்­கள்­கள், ஜொ்மனி­யா்­கள் 3 சிறப்பு விமா­னங்­களில் தங்­கள் நாட்­டிற்கு திரும்பிச் சென்­றுள்­ளனா்.