ஆவடி: ஆவடி அருகே விளையாடிக் கொண் டிருந்த மூன்று வயது குழந்தை ஒன்று தனது தலையில் ெவள்ளிப் பானையை கவிழ்த்துக் கொண்டு விளையாடியது. அப்போது, பானைக்குள் குழந்தையின் தலை சிக்கிக்கொண்டதால் வலி பொறுக்க முடியாமல் அழுததால் குடும்பத்தினர் பதறிப்போனார்கள். அதன்பின்னர் தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் குழந்தை மீட்கப்பட்டது.
ஆவடியை அடுத்த கோவில்பதாகை, அசோக் நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் திவ்யன் நேற்று முன்தினம் மாலை நேரத்தில் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தபோது, திடீ ரென வீட்டில் இருந்த ஒரு ெவள்ளிப் பானையை எடுத்து தனது தலையில் மாட்டிக்கொண்டான்.
அதன்பின்னர் அவன் எவ்வளவு முயற்சி செய்தும் பானைக்குள் இருந்து அவனது தலையை வெளியே எடுக்கமுடியாமல் அலறினான்.
குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த சீனிவாசனும் அவரது குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்தனர். பானைக்குள் சிக்கிய திவ்யனின் தலையை எவ்வளவு முயற்சி செய்தும் எடுக்க முடியாததால் பயத்தில் குழந்தை தொடர்ந்து கதறி அழுதுகொண்ட இருந்தது.
இதையடுத்து ஆவடி தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து ெவள்ளிப் பானைக்குள் எண்ணெய்யை தடவி, சற்று நேர போராட்டத்துக்கு பிறகு குழந்தையின் தலையை லாவகமாக வெளியே எடுத்தனர். ஒருவழியாக குழந்தை அழுகையை நிறுத்த சீனிவாசனும் அவரது குடும்பத்தினர் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
வெள்ளிப் பானைக்குள் சிக்கிக்கொண்ட குழந்தையின் தலையை மீட்கப் போராடும் தீயணைப்புப் படை வீரர்கள். படம்: ஊடகம்