‘வீட்டில் நூல்களை வாசித்து, பிள்ளைகளுடன் பேசி, பொழுதைக் கழிக்கவும்’

சென்னை: கொரோனா கிருமி பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை சாதகமாகப் பயன் படுத்திக் கொள்ளுங்கள் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.

இது தொடர்­பாக ஃபேஸ்புக், டுவிட்­டர், யுடி­யுப் உள்­ளிட்ட சமூக வலைத் தளப் பக்­கங்­களில் காணொளி ஒன்றை அவர் பதி­வேற்­றி­யுள்­ளார்.

“எப்­ப­டிப்­பட்ட சூழ்­நி­லை­யி­லும் அன்­றா­டம் மக்­களை நேருக்கு நேரா­கச் சந்­தித்தே பழக்­கப்­பட்­ட­வன் நான். ஆனால் கொரோனா கிருமி பர­வு­வ­தைத் தடுப்­ப­தற்­காக நாம் எல்­லா­ருமே இப்­போது தனித்து இருக்க வேண்­டிய சூழ்­நிலை. அவ­ர­வர் வீடு­களில் தனித்து இருந்­தால்­தான் கிரு­மி­யைக் கொல்­ல­வும் முடி­யும், வெல்­ல­வும் முடி­யும். அத­னால்­தான் வீடியோ மூல­மாக உங்­க­ளைச் சந்­திக்­கி­றேன்.

“இந்த சம­யத்­தில் நிறை­யப் படி­யுங்­கள். எழு­துங்­கள். பிள்­ளை­க­ளு­டன் பேசுங்­கள். பெற்­றோர்­க­ளின் அனு­ப­வங்­க­ளைக் கேட்­டுத் தெரிந்து கொள்­ளுங்­கள். உடற்­ப­யிற்சி செய்­யுங்­கள். உற்­சா­க­மா­கக் கழி­யுங்­கள். இந்த 21 நாள் அனு­ப­வம் நிச்­ச­யம் உங்­க­ளுக்கு மன­நிம்­ம­தி­யைத் தான் தரும். மனக்­கஷ்­டத்­தைத் தராது,” என்றும் அவர் கூறியுள்ளார்.

“கொரோனா நோயால் பாதிக்­கப்­ப­டு­ப­வர்­கள் தங்­க­ளைத் தனி­மைப்­ப­டுத்­திக் கொள்­வ­தற்கு சென்னை ‘அண்ணா அறி­வா­ல­யம்’ வளா­கத்­தில் உள்ள ‘கலை­ஞர் அரங்­கத்தை’ அரசு பயன்­ப­டுத்­திக் கொள்­ள­லாம் என்று அறி­வித்­தோம்.

“சென்­னை­யில் மட்­டு­மல்­லாது மற்ற ஊர்­களில் உள்ள தி.மு.க. கட்­ட­டங்­களும் மக்­கள் பயன்­பாட்­டுக்­குத் தயா­ராக இருக்­கும் என்­றும் சொல்லி இருக்­கி­றோம்!

“நாடு இப்­பொ­ழுது மிக மோச­மான நிலை­மை­யில் இருக்­கிறது. சிலர் சொல்­வது போல இது சுகா­தா­ரப் பேரி­டரோ அல்­லது பொரு­ளா­தா­ரப் பேரி­டரோ மட்­டு­மன்று; மிகப்­பெ­ரிய சமூ­கப் பேரி­ட­ரா­க­வும் மாறி­விட்­டது என்­ப­து­தான் உண்மை! இதை மக்­கள் அனை­வ­ரும் உணர வேண்­டும். முத­லில் தமி­ழக அரசு உணர வேண்­டும். ஏதோ சலு­கை­கள் அறி­வித்­தோம்; அதோடு தங்­கள் கடமை முடிந்­த­தாக நினைத்­து­வி­டக் கூடாது. ஒவ்­வொரு அறி­விப்­பும் கடைசி மனி­த­னை­யும் போய்ச் சேர்ந்­ததா என்­பதை சரி பார்க்க வேண்­டும்.

“இந்­தியா இரண்டு மாபெ­ரும் நோய்­களை வென்­று­விட்­டது. ஒன்று, பெரிய அம்மை; இன்­னொன்று போலியோ. அதே போல இந்த கொரோ­னா­வை­யும் இந்­தியா நிச்­ச­யம் வெல்­லும்” என்று சொல்லி இருக்­கி­றார். அந்த தன்­னம்­பிக்­கை­தான் இப்­போது நமக்­குத் தேவை,” என்று மேலும் மு.க. ஸ்டாலின் காணொளியில் தெரி வித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!