மதச்சாயம் பூசுவதை தவிர்க்கவேண்டும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

மதச்சாயம் பூசுவதை தவிர்க்கவேண்டும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

1 mins read
6b955aa0-6544-48d0-9800-c672f6f4a7ab
-

சென்னை: கொரோ­னா­வால் பாதிக்­கப்­ப­டு­வோ­ரை­யும் அவ­ரது குடும்­பத்­தி­ன­ரை­யும் பார்ப்­பதை அனை­வ­ரும் தவிர்க்க வேண்­டும் என முதல்­வர் பழ­னி­சாமி அறி­வு­றுத்தி உள்­ளார்.

மக்­கள் நட­மாட்­டத்­தைக் குறைக்­கும் வகை­யில் அவர் சில ஆலோ­ச­னை­களை முன்­வைத்­துள்­ளார். இது தொடர்­பாக வெளி­யிட்ட அறிக்­கை­யில், கொரோனா கிரு­மித்தொற்று உள்­ள­வர்­கள் தனி­யார் மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற விரும்­பி­னால் உரிய அனு­மதி வழங்­கப்­படும் என அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

"தனி­மைப்­ப­டுத்­தப்­பட்ட குடும்­பங்­க­ளுக்கு அத்­தி­யா­வ­சி­யப் பொருட்­களை வீடு­க­ளுக்கே சென்று வழங்க அரசு தரப்­பு­டன் இணைந்து சமூக ஆர்­வ­லர்­களும் செயல்­ப­ட­லாம்.

"மக்­கள் நட­மாட்­டத்­தைக் குறைக்க அத்­தி­யா­வ­சி­யப் பொருட்­கள் வாங்க காலை 6 மணி முதல் பிற்­ப­கல் 1 மணி வரை மட்­டுமே அனு­மதி, முன்­னர் இருந்த 2.30 மணி வரை­யி­லான நேரம் குறைக்­கப்­பட்­டுள்­ளது," என முதல்­வர் பழ­னி­சாமி தெரி­வித்­துள்­ளார்.

கொரோனா விஷ­யத்­தில் மதச் சாயம் பூசு­வதை தவிர்க்க வேண்­டும் என்று கேட்­டுக்கொண்­டுள்ள அவர், அரசு தெரி­வித்­துள்ள விதி­மு­றை­களை மீறு­வோர் மீது சட்­டப்­ப­டி­யான நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­படும் என எச்­ச­ரித்­துள்­ளார்.

அனைத்து மதத் தலை­வர்­களும் சமூக தொண்­டர்­களும் மாவட்­டங்­களில் மாவட்ட ஆட்சியர்­க­ளு­ட­னும் சென்­னை­யில் மாந­க­ராட்சி ஆணையரு­ட­னும் ஒருங்­கி­ணைந்து செயல்­பட வேண்டும் என முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.