நாம் தமிழர் கட்சி நிர்வாகி கோரிக்கை: நடவடிக்கை எடுத்த முதல்வர்

நாம் தமிழர் கட்சி நிர்வாகி கோரிக்கை: நடவடிக்கை எடுத்த முதல்வர்

1 mins read
659f1497-dcd4-43aa-93fd-71b2874638ff
எவ்­வ­ளவு சொன்­னா­லும், சிலர் கேட்­ப­தில்லை. இனி­மேல் சட்­டம் தன் கட­மை­யைச் செய்­யும் என்று பொது­மக்­களை தமி­ழக முதல்­வர் எடப்­பாடி பழ­னி­சாமி எச்­ச­ரித்­துள்­ளார். -

சென்னை: இடும்பாவனம், அடஞ்சவிளாகம் பகுதியில் குடிசை கள் அமைத்து வசித்து வரும் 40க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த குடும்பங்கள் ஊரடங்கு உத்தரவால் உணவுக்கு வழியின்றி சில நாட்களாக அல்லாடி வருவதாக நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஒருவர் சமூக வலைத்தளப் பக்கத்தில் குறிப்பிட்டிருந் தார். இது குறித்து தகவலறிந்த முதல்வர் பழனிசாமி, நரிக்குறவர்களில் ஒருவரது கைபேசி எண்ணை பகிர்ந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என பதிலளித்தார். நாம் தமிழர் நிர்வாகி இரண்டு கைபேசி எண்களை தெரிவிக்க, அரசு சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பலரும் முதல்வரைப் பாராட்டி உள்ளனர்.