அரசு உறுதி: முழு வீச்சில் பணிகள்

அரசு உறுதி: முழு வீச்சில் பணிகள்

1 mins read
634300da-d108-4ce5-ae40-0719d3b57167
-

சென்னை: தமி­ழ­கத்­தில் கொரோனா கிரு­மித் தொற்று பாதிப்­புள்­ளதா என்­ப­தைக் கண்­ட­றி­வ­தற்­காக 21 இடங்­களில் பரி­சோ­தனை மையங்­களை அமைக்க மத்­திய அர­சின் அனு­மதி கோரப்­பட்­டுள்­ள­தாக முதல்­வர் பழ­னி­சாமி தெரி­வித்­தார்.

மேலும் விரை­வாக பரி­சோதனை முடி­வு­க­ளைத் தெரிந்து கொள்­வ­தற்­காக 1 லட்­சம் பரி­சோ­த­னைக் கரு­வி­கள் வாங்­கப்­பட இருப்­ப­தாக அவர் நேற்று செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசும்­போது தெரி­வித்­தார்.

நேற்று மாவட்ட ஆட்­சி­யர்­க­ளு­டன் முதல்­வர் ஆலோ­ச­னை­யில் ஈடு­பட்­டார். பின்னர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அவர், தமி­ழ­கத்­தில் கொரோனா கிருமி பர­வல் தடுப்­புப் பணி­கள் முழு­வீச்­சில் நடை­பெற்று வரு­வ­தா­கக் குறிப்­பிட்­டார்.

கொரோனா நோயா­ளி­க­ளுக்கு சிகிச்சை அளிப்­ப­தற்கு உத­வும் வகை­யில் அரசு மற்­றும் தனி­யார் மருத்­து­வ­ம­னை­களில் 3,371 செயற்கை சுவா­சம் அளிக்­கும் வென்­டி­லேட்­டர் கரு­வி­கள் இருப்­ப­தாக முதல்­வர் தெரி­வித்­தார்.

இது­வரை சென்னை விமான நிலை­யத்­தில் 2,10,538 பய­ணி­கள் பரி­சோ­திக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் பொது­மக்­க­ளின் ஒத்­து­ழைப்பு இருந்­தால்­தான் கொரோனா கிரு­மியை ஒழிக்­க­மு­டி­யும் என்­றும் முதல்­வர் பழ­னி­சாமி தெரி­வித்­தார்.

கொரோனா கிரு­மி­யின் தாக்­கம் குறைய தனி­மைப்­ப­டுத்­து­வது ஒன்றே தீர்வு என்று குறிப்­பிட்ட அவர், மத்­திய அர­சி­ட­மி­ருந்து முதற்­கட்­ட­மாக ரூ.500 கோடி நிதி வந்­துள்­ளது என்­றார்.

ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு நீட்டித்தால், மாநிலங்கள் இதுதொடர்பாக முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று அறிவித்தால் தமிழக அரசு உரிய முடிவை எடுக்கும் என்றும் முதல்வர் பழனிசாமி மேலும் தெரிவித்தார்.