ஒரு லட்சம் துரித ஆய்வுக் கருவிகள் கொள்முதல்

ஒரு லட்சம் துரித ஆய்வுக் கருவிகள் கொள்முதல்

2 mins read
cc0e0b80-599a-4cc2-be93-9f104f2f9e1b
முதல்வர் எடப்பாடி பழனிசாமி -

சென்னை: கொரோனா நோய்த்­தொற்­றால் வரக்­கூ­டிய காய்ச்­சல், இரு­மல் ஆகி­ய­வற்றை போக்­கக் கூடிய மருந்­து­கள், நோய் எதிா்ப்பு மருந்­து­கள் தேவை­யான அள­வுக்கு முழு­மை­யாக கையி­ருப்­பில் உள்­ள­தாக முதல்­வர் பழ­னி­சாமி தெரி­வித்­துள்­ளார்.

மேலும், கொரோனா நோய்த்­தொற்றை கண்­ட­றி­வ­தற்கு ஒரு லட்­சம் துரித ஆய்­வுக் கரு­வி­கள் கொள்­மு­தல் செய்ய உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக அவர் கூறி­யுள்­ளார்.

கொரோனா நோய்த்­தொற்று தடுப்­புப் பணி­கள் குறித்து தலை­மைச் செய­ல­கத்­தில் இருந்து காணொளி வசதி மூலம் நேற்று முன்தினம் மாவட்ட ஆட்­சி­யா்­க­ளு­டன் அவர் ஆலோ­சனை நடத்­தினாா்.

இதை­ய­டுத்து செய்­தி­யா­ளா்­க­ளி­டம் பேசிய முதல்­வர், தமி­ழ­கத்­தில் கொரோனா நோய்த்­தொற்றை கண்­ட­றி­வ­தற்­காக, வரும் 10ஆம் தேதி புதிய பரி­சோ­தனை நடை­முறை அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­டு­கிறது என்­றும், இதன் மூலம் 30 நிமி­டங்­களில் கொரோனா தொற்று உள்­ளதா என தெரிந்துகொள்ள முடி­யும் என்­றும் தெரி­வித்­தார்.

"சீனா­வில் இருந்து கொள்­மு­தல் செய்­யப்­படும் கரு­வி­கள் கிடைத்­த­வு­டன் விரை­வாக, வேக­மாக ஒரே நேரத்­தில் ஒரு லட்­சம் பேருக்கு பரி­சோ­தனை செய்ய முடி­யும்.

"அந்­தப் பரி­சோ­த­னை­யின் நேரமே 30 நிமி­டங்­கள்­தான். இந்­தக் கரு­வி­களை சீனா­வில் இருந்து (நாளை) 9ஆம் தேதிக்­குள் கொள்­மு­தல் செய்ய நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.

"அந்­தக் கருவி கிடைத்­த­வு­டன், வரும் 10ஆம் தேதி முதல் எங்­கெல்­லாம் பரி­சோ­தனை மேற்­கொள்ள வேண்­டுமோ அங்­கெல்­லாம் அனுப்பி வைக்­கப்­பட்டு, பரி­சோ­தனை விரை­வாக நடை­பெற வழி வகுக்­கப்­படும்," என்­றார் முதல்வா் பழ­னி­சாமி.

கொரோனா கிருமித்தொற்றின் வீரியம் இந்தியாவிலும் படிப்படியாக அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், தமிழகத்தைப் பொறுத்தவரை கிருமித்தொற்றை தடுப்பதற்கான பணிகளில் அரசு முழுமூச்சுடன் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

தமிழக விமான நிலையங்களில் பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 10 ஆயிரத்து 538 என்றும், மேற்கண்ட பயணிகளில் வீட்டுக் கண்காணிப்பில் இருந்து வருபவர்களின் எண்ணிக்கை 90,541 என்றும் முதல்வர் குறிப்பிட்டார்.

இவர்களில் 28 நாட்கள் கண்காணிப்பு நிறைவு பெற்ற பயணிகளின் எண்ணிக்கை 10,814 என்றார் அவர்.

"தமி­ழ­கத்­தில் இது­வரை ஆய்­வ­கப் பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை 4,612. இதில் இன்­று­ வரை கொரோனா கிரு­மித்­தொற்று கண்­ட­றி­யப்­பட்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை 571. கிரு­மித்தொற்று என சந்­தே­கிக்கப்­பட்டு, உள்­நோ­யா­ளி­யாக தனிப்பிரி­வில் உள்­ள­வர்­க­ளின் எண்­ணிக்கை 1,848.

"மருத்­து­வ­ம­னை­களில் நோயா­ளி­க­ளுக்கு சிகிச்சை அளிக்­கக்­கூ­டிய அள­விற்கு 22,049 படுக்­கை­கள் தயார்நிலை­யில் இருக்­கின்­றன.

"தடை உத்­த­ரவை கடு­மை­யாக்­கு­வ­தற்கு அரசு என்ன நட­வ­டிக்கை எடுத்­தி­ருக்­கிறது என கேட்­கி­றீர்­கள். அர­சாங்­கம் மக்­க­ளை­யும் கஷ்­டப்­ப­டுத்­தக் கூடாது, அவர்­க­ளுக்கு எந்த தொந்­த­ர­வும் கொடுக்­கக்­கூ­டாது. அதே நேரத்­தில், இந்­தக் கிருமி பர­வா­மல் தடுக்­கப்­பட வேண்­டும்.

"மக்­களை கஷ்­டப்­ப­டுத்தி, துன்­பு­றுத்தி இந்த தடை உத்­த­ரவை அமல்­ப­டுத்­து­வது என்­பது இய­லாத காரி­யம். சட்­டத்தை நாம் போட­லாம், ஆனால் அதை நடை­மு­றைப்­ப­டுத்த மக்­கள் ஒத்­து­ழைப்பு வேண்­டும்," என்­றார் முதல்­வர் பழ­னி­சாமி.