தேவையின்றி ஊர் சுற்றக்கூடாது: காவல்துறை எச்சரிக்கை

1 mins read
a108d6dd-9d5d-4f1e-b602-09d24de7b03d
இருசக்கர வாகனத்தில் வந்த இருவரிடம் வெளியே வந்ததற்கான காரணத்தைக் கேட்கும் காவலர். படம்: ஊடகம் -

சென்னை: ஊர­டங்கை மீறி பலர் தேவை­யில்­லா­மல் வெளியே சுற்றி வரு­வ­தாக சென்னை காவல்­துறை ஆணை­யர் ஏ.கே.விஸ்­வ­நா­தன் அதி­ருப்தி தெரி­வித்­துள்­ளார்.

இவ்­வாறு பல கிலோ­ மீட்­டர் தூரம் வாக­னங்­களில் வெளியே சுற்­று­ப­வர்­கள் மீது கடும் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என அவர் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளார்.

செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய ஆணை­யர், மளி­கைக் கடைக்­குச் செல்­வ­தா­கக் கூறி பல கிலோ மீட்­டர் தூரத்­திற்கு வாக­னங்­களில் பய­ணம் மேற்­கொள்­வ­தா­கச் சுட்­டிக்­காட்­டி­னார்.

அத்­தி­யா­வ­சி­யப் பொருட்­கள் ஒருசில கிலோ மீட்­டர் தூரத்­தி­லேயே கிடைக்க வழி­வகை செய்­யப்­பட்­டுள்­ள­தா­கக் குறிப்­பிட்ட அவர், காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை மக்­கள் தங்­க­ளுக்­குத் தேவை­யான அத்­தி­யா­வ­சி­யப் பொருட்­களை அரு­கில் உள்ள கடை­களில் வாங்­கிக்­கொள்­ள­லாம் என்­றார்.

கொரோனா கிரு­மித்­தொற்­றுப் பர­வ­லின் வீரி­யத்தை மக்­கள் இன்­னும் உண­ர­வில்லை எனக் கவலை தெரி­வித்த ஆணை­யர் விஸ்வநாதன், மக்­க­ளுக்­காக அனைத்­துத் துறை­களும் கடு­மை­யாக வேலை செய்து வரும் நிலை­யில், அதன் வீரி­யத்தை மக்­கள் புரிந்­து­கொள்­ளா­மல் இருக்­கக் கூடாது என வலி­யு­றுத்­தி­னார்.

இதற்கிடையே ஊர­டங்கு உத்­த­ரவை மீறிய ஒரு லட்­சத்­துக்­கும் அதி­க­மா­னோர் தமி­ழ­கம் முழு­வ­தும் கைதாகி உள்­ள­னர்்.