சென்னையில் 47 இடங்கள் தனிமைப் படுத்தப்பட்டன

சென்னையில் 47 இடங்கள் தனிமைப் படுத்தப்பட்டன

2 mins read
229c1502-d5bf-4af6-b964-c430014cbdd0
வாகனங்களில் செல்வோரை தடுத்து விசாரிக்கும் காவல்துறையினர். படம்: ஊடகம் -

சென்னை: கொரோனா கிரு­மித் தொற்­றின் தாக்­கம் நாடு முழு­வ­தும் அதி­க­ரித்து வரும் நிலை­யில் சென்­னை­யில் 47 இடங்­க­ளுக்கு சீல் வைக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லை­யில் ஊர­டங்கு உத்­த­ரவை மீறி­ய­தா­கத் தமி­ழ­கத்­தில் கைது செய்­யப்­பட்­டோர் எண்­ணிக்கை 1 லட்­சத்து 10 ஆயி­ர­மாக அதி­க­ரித்­துள்­ளது.

கொரோனா கிரு­மித் தொற்று தடுப்பு நட­வ­டிக்­கை­க­ளைத் தமி­ழக அரசு தீவி­ரப்­ப­டுத்தி உள்­ளது. எனி­னும் மாநி­லத்­தில் கிரு­மித் தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்­த­வண்­ணம் உள்­ளது.

நோய்த் தொற்­றால் அதி­கம் பாதிக்­கப்­பட்ட மாவட்­டங்­களில் சென்னை முத­லி­டம் வகிக்­கிறது. அங்கு ராய­பு­ரம், காசி­மேடு உள்­ளிட்ட வட­சென்னை பகு­தி­யில் கொரோனா கிரு­மித் தொற்று அதி­க­மாக உள்­ளது.

இந்­நி­லை­யில் பாதிப்பு அதி­கம் உள்­ள­தாக அடை­யா­ளம் காணப்­பட்ட பகு­தி­க­ளுக்கு அதி­கா­ரி­கள் சீல் வைத்­த­னர். இந்­தப் பகு­தி­களில் வெளியே நட­மா­டு­ப­வர்­கள் மீது கடும் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

தனி­மைப்­ப­டுத்­தப்­பட்ட பகு­தி­களில் வாக­னங்­க­ளைப் பயன்­ப­டுத்­த­வும் தடை விதிக்­கப்­பட்­டுள்­ள­தாக அர­சுத் தரப்­பில் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. மாநி­லம் முழு­வ­தும் ஊர­டங்­கின்­போது வெளியே சுற்­றி­ய­வர்­கள் மீது சுமார் 93 ஆயி­ரம் வழக்­கு­கள் பதி­வாகி உள்­ளன. சுமார் 78 ஆயி­ரம் வாக­னங்­கள் பறி­மு­தல் செய்­யப்­பட்­ட­தாக காவல்­துறை தெரி­வித்­துள்­ளது.

சென்னையைப் பொறுத்தவரை தனிமைப்படுத்தப்படாத பகுதிகளைச் சேர்ந்தவர்கள் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை மட்டுமே அத்தியாவசியப் பொருட்களை வாங்க வீட்டை விட்டு வெளியே வரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை

தமிழகத்தில் கொரோனா கிருமித் தொற்றால் சுமார் 700 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 149 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவையில் 58, திண்டுக்கல்லில் 45, நெல்லையில் 38, ஈரோட்டில் 32, திருச்சியில் 17, நாமக்கல்லில் 25, ராணிப்பேட்டையில் 22, செங்கல்பட்டில் 22, மதுரையில் 19, கரூர் 23, தேனி மாவட்டத்தில் 23 பேர் கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அரியலூர் பெரம்பலூர் மாவட்டங்களில் தலா ஒருவருக்கு மட்டுமே கிருமித் தொற்று ஏற்பட்டுள்ளதாக அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டும் கொரோனா கிருமித் தொற்றிலிருந்து தப்பித்துள்ளது. அங்கு இதுவரை ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை.