கோவை: ஊரடங்கு உத்தரவால் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் கோவையில் ஆளில்லாமலேயே ஒரு ரொட்டிக் கடை செயல்படுகிறது.
அங்கு ரத்தினபுரி 7ஆவது வீதியில் ரொட்டிக் கடை நடத்தி வருபவர்கள் தினமும் கடைக்கு முன்பு ஒரு மேசையில் ரொட்டி பாக்கெட்டுகளை வைத்து விடுகின்றனர். அதன் அருகிலேயே பணம் போடுவதற்கு என சிறு பெட்டியும் வைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தேவையான ரொட்டியை எடுத்துக் கொண்டு அதற்குரிய தொகையை பெட்டியில் போட்டுச் செல்கின்றனர். அதே சமயம் ஏழைகள் பணம் ஏதும் செலுத்தாமல் ரொட்டியை எடுத்துச் செல்வதை யாரும் தடுப்பதில்லை.

