எம்எல்ஏக்களுக்கு முதல்வர் புது உத்தரவு

எம்எல்ஏக்களுக்கு முதல்வர் புது உத்தரவு

1 mins read
84246229-c6f0-4df3-83cf-7f9acb91337e
-

சென்னை: கொரோனா கிரு­மித் தொற்று பர­வல் தடுப்பு நட­வ­டிக்­கை­க­ளுக்­காக எம்­எல்­ஏக்­கள் தங்­க­ளது தொகுதி நிதி­யி­லி­ருந்து தலா 1 கோடி ரூபா­யைப் பயன்­ப­டுத்த வேண்­டும் என முதல்­வர் பழ­னி­சாமி உத்­த­ர­விட்­டுள்­ளார்.

கிரு­மித் தொற்று தடுப்பு நட­வ­டிக்­கை­க­ளுக்­காக தமி­ழக அர­சுக்கு பொது­மக்­கள் நிதி­ய­ளித்து உத­வ­வேண்­டும் என­வும் அவர் வேண்­டு­கோள் விடுத்­துள்­ளார்.

இது தொடர்­பாக வெளி­யிட்ட அறிக்­கை­யில், கொரோனா கிரு­மித் தொற்­றி­லி­ருந்து தமி­ழக மக்­க­ளைப் பாது­காக்க அதி­முக அரசு போர்க்­கால அடிப்­ப­டை­யில் பல்­வேறு நட­வ­டிக்­கைளை எடுத்து வரு­வ­தாக முதல்­வர் குறிப்­பிட்­டுள்­ளார்.

"அரசு மேற்­கொள்­ளும் நட­வ­டிக்­கை­க­ளுக்­காக பல­ரும் முதல்­வர் பொது நிவா­ரண நிதிக்கு தாரா­ள­மாக நிதி­ய­ளித்து வரு­கி­றார்­கள்.

"சிறு­வர், சிறு­மி­யர் மாண­வர்­க­ளும்­கூட தங்­க­ளால் இயன்ற சிறிய பங்­க­ளிப்பை பெரிய மன­து­டன் வழங்கி தங்­கள் கருணை உள்­ளத்தை வெளிப்­ப­டுத்தி வரு­கின்­ற­னர்," என்று முதல்­வர் பழ­னி­சாமி தெரி­வித்­துள்­ளார்.

சிறு­துளி பெரு­வெள்­ளம் என்ற முது­மொ­ழிக்­கேற்ப தமி­ழ­கத்­தில் உள்ள ஒவ்­வொ­ரு­வ­ரும் சிறு தொகை வழங்­கி­னாலே இப்­பே­ரி­டர் நேரத்­தில் ஏழை எளிய மக்­க­ளைக் காப்­பாற்ற பேரு­த­வி­யாக இருக்­கும் என்று குறிப்­பிட்­டுள்ள அவர், பொது­மக்­க­ளின் பங்­க­ளிப்­பைத் தமி­ழக அரசு எதிர்­பார்ப்­ப­தா­கத் தெரி­வித்­துள்­ளார்.