திருநெல்வேலி: கொரோனா கிருமியைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடெங்கும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளனர். இதன் காரணமாக மக்கள் பலரும் வீட்டுக்குள் முடங்கியுள்ள நிலையில் தமிழகத்தை சுத்தப்படுத்தும் பணியில் தூய்மைப் பணியாளர்கள் அயராது ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களின் சேவையை கௌரவிக்கும் வகையில் ஈரோட்டைச் சோ்ந்த தம்பதியா் பாத பூஜை செய்து, உணவிட்டு உபசரித்தனா்.
இதேபோல் திருநெல்வேலியில் நோய்த்தொற்று காலத்தில் உன்னத பணியாற்றி வரும் மாநகராட்சி சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு நெல்லை மாநகரக் காவல்துறையினர் "மரியாதை காப்பு அணிவகுப்பு" அளித்து கௌரவித்துள்ளனர்.
ஈரோடு வில்லரசம்பட்டி, போயஸ் காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் காளியம்மாள். இவரது கணவா் சந்திரசேகா், தையல் கலைஞா்.
இந்த தம்பதியா் வில்லரசம்பட்டி பகுதிக்கு தூய்மைப் பணிக்கு வந்த மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களைத் தங்கள் வீட்டுக்கு அழைத்து, அவர்கள் பாதங்களைத் தண்ணீரால் கழுவி, குங்குமம், சந்தனம் வைத்து பூக்களைத் தூவி பாத பூஜை செய்தனா்.
பின்னா், துப்புரவுப் பணியாளரின் கழுத்தில் மாலை அணிவித்து, நெற்றியில் சந்தனம், குங்குமம் இட்டு அவர்களை வணங்கி மரியாதை செலுத்தி, மதிய உணவிட்டு உபசரித்தனா்.
ஈரோடு மாவட்டம், அந்தியூர் பேரூராட்சியில் தூய்மைப் பணியாளருக்கு பொதுமக்கள் பாத பூஜை செய்து மரியாதை செலுத்திய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற் படுத்தியுள்ளது. பூஜையைத் தொடர்ந்து அவர்களுக்கு பண மாலை அணிவித்து மரியாதை செய்ததோடு, ஒரு நிமிடம் கை தட்டி பாராட்டியும் ஊக்கமூட்டினர்.

