மேலும் 14 நாட்­கள் ஊர­டங்கை நீட்டிக்க மருத்­து­வக் குழு பரிந்துரை

மேலும் 14 நாட்­கள் ஊர­டங்கை நீட்டிக்க மருத்­து­வக் குழு பரிந்துரை

1 mins read
ebba4ee7-0a26-4ad5-bf27-ccb412f0cb36
மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் மீது சென்னை மாநகராட்சி வாகனத்தில் கிருமி நாசினியைத் தெளிக்கின்றனர் மாநகராட்சி ஊழியர்கள். படம்: ராய்ட்டர்ஸ் -

சென்னை: தமிழ்­நாட்­டில் ஊர­டங்கை மேலும் 2 வாரங்­க­ளுக்கு நீட்­டிக்க மருத்­துவ நிபு­ணர்­கள் குழு தமிழக அரசுக்கு பரிந்­துரை அளித்­துள்­ளது. இவ்­வாறு ஊர­டங்கை நீட்­டிக்­கும்­போ­து­தான், கொரோ­னா­வால் பாதிக்­கப்­பட்­ட­வ­ரின் குடும்­பத்­தி­னர், அவ­ரோடு தொடர்­பில் இருந்­த­வர்­கள், அவர்­கள் வசிக்­கும் பகு­தி­யில் உள்­ள­வர்­கள் என அனை­வ­ரை­யும் முழு­மை­யாக பரி­சோ­திக்­க­மு­டி­யும் என­வும் குழு கூறி­யுள்­ளது. கொரோனா பர­வல் தடுப்பு தொடர்­பான பரிந்­து­ரை­களை வழங்கும் 19 மருத்­து­வர்­கள் கொண்ட நிபு­ணர் குழு, சிகிச்சை நெறி­முறைகளை வகுப்­ப­தோடு, வெளிநாடு­களில் பின்­பற்­றப்­படும் சிகிச்சை முறை­களையும் ஆராய்ந்து, அதனை தமிழ்­நாட்­டில் செயல்­படுத்­து­வ­தற்­கான பரிந்­து­ரை­களை வழங்­கும்.