ஊரடங்கை மீறினால் 6 மாதங்கள் சிறை

ஊரடங்கை மீறினால் 6 மாதங்கள் சிறை

3 mins read
8dc4e3cf-d864-4f94-88e7-b8eeb0c9ddad
ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் ஏராளமான மாடுகள் சாலைகளில் வாகனங்களின் இடையூறின்றிச் சுற்றித் திரிகின்றன. இருந்தாலும் அவை உணவின்றி தவிக்கின்றனர். படம்: ராய்ட்டர்ஸ்/ ரவிக்குமார் -

திருச்சி: உயிர்க்­கொல்லி நோயாக உல­கெங்­கும் உள்ள மக்­க­ளைத் தொற்றி வரும் கொரோனா கிரு­மி­யின் ஆபத்து புரி­யா­மல் ஊர­டங்கு உத்­த­ரவை மீறி ஊர் சுற்­று­பவர்­க­ளுக்கு ஆறு மாதம் சிறைத் தண்­டனை விதிக்கப்பட உள்­ளது. அதற்­கேற்ப சட்ட நட­வ­டிக்­கை­கள் கடுமையாக்­கப்­பட்டு உள்ளதாக போலிஸ் உயர் அதி­கா­ரி­கள் தெரி­வித்துள்­ள­னர்.

இது­கு­றித்து போலிஸ் உயர் அதிகாரி­கள் கூறி­ய­போது, "தமி­ழ­கத்­தில் அனைத்­துப் பொருட்­களும் எப்­போ­தும் போலவே தாராளமாகக் கிடைக்­கின்­றன. எந்த பொருட்­க­ளுக்­கும் தட்­டுப்­பாடு இல்லை.

"இந்த சூழ்­நி­லை­யில், சிலர் தேவை­யின்றி தங்­கள் வசிப்­பி­டத்­தில் இருந்து 2 கி.மீ. துாரத்­திற்கு அப்­பால் சென்று வெளியே சுற்றி வரு­கின்­ற­னர். தங்களுக்கு மட்டு மின்றி தங்களது குடும்பத்தினரின் உயிருக்கும் ­ அவர்களது போக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும் என்ப தால் விதிமுறைகளை மீறுபவர் களைக் கைது செய்து சிறை­யில் அடைக்க உள்­ளோம்," என்று தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அத்தியாவசியம் என்றாலும் வீட்டில் இருந்து 1 கி.மீ. சுற்றளவுக்கு மேல் வெளியே வரக்கூடாது என போலிஸ் ஆணை யர் வரதராஜு எச்சரித்துள்ளார்.

"திருச்சி மாநகரில் அனைத்துப் பகுதியிலும் மளிகை கடைகள் உள்ளன. எனவே பொது மக்கள் யாரும் அத்தியாவசிய பொருட்களை வாங்க வீட்டில் இருந்து 1 கி.மீ. தொலைவுக்கு மேல் வெளியே வரக்கூடாது. மீறி வந்தால் வாகனம் பறிமுதல் செய்யப்படுவதுடன், சம்பந்தப்பட்டவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்," என்று வரதராஜு கூறினார்.

இந்திய நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கிருமி பாதிப்பில் தமி­ழ­கம் இரண்­டா­வது இடத்­தில் உள்­ளது.

இருப்பினும் கிருமி குறித்த கொடூ­ரம் இன்னும் மக்களுக்கு தெளிவாகப் புரி­யாததால் அலட்சிய மாக ஊர் சுற்றி வருகின்­ற­னர்.

இந்த அலட்சியப் போக்கை கட்டுப்படுத்தவே போலி­சார் சட்ட ரீதி­யான நட­வ­டிக்­கை­களைக் கடு­மை­யாக்கி உள்­ள­னர்.

அறிந்தோ அல்­லது கவ­னக்­குறை­வா­கவோ எவரேனும் கிரு­மி­க­ளைப் பர­வ­வைப்­பது என்பது சட்­டப்­படி குற்­றம். அதற்கு ஆறு மாதம் சிறைத் தண்­டனையும் அப­ரா­தமும் விதிக்­கப்­படும். அதற்கு இந்­திய தண்­டனை சட்­டம் 269 பிரிவு வழி­வகை செய்­கிறது.

தற்­போது ஊர­டங்கை மீறு­வோர்­ இந்த சட்­டப் பிரி­வின் கீழ் கைது செய்­யப்­பட்டு வரு­கின்­ற­னர்.

தமி­ழ­கத்­தில் ஊர­டங்கு உத்­த­ரவை மீறி­ய­தாக கைதா­ன­வர்­க­ளி­டம் இருந்து 97 ஆயி­ரத்து 146 வாக­னங்­கள் பறி­மு­தல் செய்­யப்­பட்­டுள்­ளன. 38.54 லட்­சம் ரூபாய் அப­ரா­தம் வசூ­லிக்­கப்­பட்­டுள்­ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

உயர் நீதிமன்றம்: கட்டுப்படாதவர்கள் வாகனங்களைப் பறிமுதல் செய்யலாம்

ஊரடங்கு உத்தரவை அலட்சியப்படுத்துவோரின் வாகனங்களைப் போலிசார் எந்தவித பாவ புண்ணியமும் பார்க்காமல் பறிமுதல் செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக தினமும் காலை 6 முதல் மதியம் 1 வரை பொதுமக்கள் வெளியே சென்றுவர அனுமதி உள்ளது.

இந்நிலையில், மதியம் 1 மணிக்கு பிறகும் தேவையின்றி பலர் வாக னங்களில் பொது இடங்களில் சுற்றித்திரிகின்றனர்.

இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதி மன்ற நீதிபதிகள் அமர்வு நேற்று முன்தினம் பிறப்பித்த உத்தரவில், "144 தடை உத்தரவை மீறி வெளியே அனாவசியமாக சுற்றித் திரிபவர் களின் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களைப் போலிசார் உடனடி யாகப் பறிமுதல் செய்யவேண்டும்.இதுகுறித்து அவர்கள் பணிபுரியும் நிறுவனங்களுக்கும் போலிசார் தகவல் தெரிவிக்கவேண்டும்," என்று நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

-