லாரன்ஸ்: ரூ.3 கோடி போதாது, மக்களுக்கு இன்னும் கொடுப்பேன்

2 mins read
834e428f-a302-489a-8159-764d63508a27
பாதிக்­கப்­பட்ட மக்களின் பசி­யில் கட­வுள் இருப்­ப­தாக   தான் நம்­பு­வ­தா­கக் குறிப்­பிட்­டுள்ள  நடி­கர் ராகவா லாரன்ஸ், இன்­றைய தமிழ்ப் புத்­தாண்டு தினத்­தில் மேலும் பல உதவிகளை ஊர­டங்கு உத்­த­ர­வால் பாதிக்­கப்பட்­டுள்ள தமி­ழக மக்­க­ளுக்கு வழங்க உள்­ள­தா­கத் தெரி­வித்­துள்­ளார்.  -

சென்னை: பாதிக்­கப்­பட்ட மக்களின் பசி­யில் கட­வுள் இருப்­ப­தாக தான் நம்­பு­வ­தா­கக் குறிப்­பிட்­டுள்ள நடி­கர் ராகவா லாரன்ஸ், இன்­றைய தமிழ்ப் புத்­தாண்டு தினத்­தில் மேலும் பல உதவிகளை ஊர­டங்கு உத்­த­ர­வால் பாதிக்­கப்பட்­டுள்ள தமி­ழக மக்­க­ளுக்கு வழங்க உள்­ள­தா­கத் தெரி­வித்­துள்­ளார்.

"மக்களுக்கு சேவை செய்ய இது­வே தக்க தரு­ணம்," என்று கூறி­யுள்­ள லாரன்ஸ், "நான் ஏற்­கெனவே கொரோனா நிவா­ரண நிதி­யாக ரூ.3 கோடி அளித்­துள்­ளேன்.

"இந்த நிதி போது­மா­னது அல்ல என்­ப­தால் மேலும் பல உத­வி­களை இன்­றைய தினத்­தில் வழங்க உள்ளேன்," என்று அவர் தனது ஃபேஸ்புக் பக்­கத்தில் கூறி­யுள்­ளார்.

"நிவா­ரண நிதிக்கு நான் அளித்த நன்­கொ­டைக்­குப் பிறகு சண்­டைக் கலை­ஞர்­கள், உதவி இயக்­கு­நர்­கள் மற்­றும் பலர் மேலும் உத­வி­கள் செய்­யு­மாறு கோரினர்.

"பொது­மக்­க­ளி­டம் இருந்­தும் வந்­துள்ள கடி­தங்­கள், காணொளி களை எல்­லாம் பார்க்­கும்­போது என் இத­யமே நொறுங்கிவிடும்­போல இருந்­தது. "அவை அனைத்­துக்­கும் நான் தந்த ரூ.3 கோடி போதாது என்ப தால் நானும் எனது நண்­பர்­களும் தமி­ழக அர­சு­டன் இணைந்து ஏழை எளிய மக்­க­ளுக்கு உத­வி­டும் வகை­யில் இன்று சில சேவைத் திட்­டங்­ க­ளைச் செயல்­ப­டுத்தத் தயாராகி உள்­ளோம்," என்றார் லாரன்ஸ்.

இந்நிலையில், "தன்­னார்­வ­லர்­களோ, தனி நபர்­களோ உண­வுப் பொருட்கள் எதை­யும் வழங்­கக் கூடாது என்ற தமி­ழக அர­சின் தடை உத்­த­ரவை மறு­ப­ரி­சீ­லனை செய்யவேண்­டும்," என்று இயக்கு­ந­ரு­மான லாரன்ஸ் தமி­ழக முதல்­ வ­ரை கேட்டுக்கொண்டுள்ளார்.

இதற்கிடையே கொரோனா நிவா­ரண நிதி­யாக நடி­கர்கள் அஜித் குமார் ரூ.1 கோடியே 25 லட்சம், சிவகார்த்­தி­கே­யன் ரூ.35 லட்­சம், சிவக்­கு­மார் தன் குடும்­பத்­தி­னர் சார்­பாக ரூ.10 லட்­சம், ரஜி­னி­காந்த் ரூ.50 லட்­சம், விஜய் சேது­பதி ரூ.10 லட்­சம், ஹரீஷ் கல்­யாண் ரூ.1 ­லட்சம், தயா­ரிப்­பா­ளர் லலித்­கு­மார் ரூ.10 லட்சம், பிர­காஷ்­ராஜ் 25 கிலோ எடை­யுள்ள 150 அரிசி மூட்­டை­களையும் வழங்கி உள்ளதாக தமிழக ஊடகத் தகவல்கள் தெரி வித்துள்ளன.