கிருமி தொற்றிய ஆடவருடன் தொடர்பில் இருந்த 40 போலிசாருக்கும் பரிசோதனை

கிருமி தொற்றிய ஆடவருடன் தொடர்பில் இருந்த 40 போலிசாருக்கும் பரிசோதனை

1 mins read
7f0f1808-c1b8-4a26-9a18-136b41c40dce
கொரோனா கிருமியின் தோற்றத்தில் இருக்கும் தலைக் கவசத்தை அணிந்து கொண்டுள்ள போலிஸ்காரர் ஒருவர் 'கொவிட் 19' கிருமி குறித்த நோட்டீஸ்களை சென்னை குடியிருப்பா ளர்களை நேரில் சந்தித்து வழங்குகிறார். படம்: ஏஎஃப்பி -

துடி­ய­லூர்: கொரோனா கிரு­மி­த் தொற்றால் பாதிக்­கப்­பட்டு சிகிச்சை பெற்றுவரும் ஆட­வ­ரு­டன் தொடர்­பில் இருந்த 40 போலி­சா­ருக்­கும் இந்தக் கிருமி தொற்­றி­யுள்­ளதா என்­பது குறித்து பரி­சோ­தனை மேற்­கொள்­ளப்பட்­டுள்­ளது.

கோவை மாவட்­டம், துடி­ய­லூ­ரைச் சேர்ந்த 61 வயது ஆட­வர், கடந்த 23ஆம் தேதி டெல்­லி­யில் இருந்து கோவைக்கு விமா­னம் மூலம் வந்­தார். அவ­ருக்கு இரு­முறை நடத்­தப்­பட்ட பரி­சோ­த­னை­யில் கொரோனா தொற்று இல்லை என்­பது உறுதியானது.

இதையடுத்து அவர் கடந்த சில தினங்­க­ளாக கண்­கா­ணிப்­புப் பணி­யில் ஈடு­பட்­டி­ருந்த துடி­ய­லூர் போலி­சா­ருக்­கும் அங்­குள்ள சிலருக்­கும் உணவு விநி­யோ­கித்து வந்­துள்­ளார்.

இந்­நி­லை­யில், நேற்று அந்த 61 வயது நப­ருக்கு 3வது முறை­யாக நடத்­தப்­பட்ட பரி­சோ­த­னை­யில் கொரோனா கிருமித் தொற்று இருப்பது உறு­தி­யா­னது.

இதை­த்தொடர்ந்து அவர் கோவை இஎஸ்ஐ மருத்­து­வ­ம­னை­யில் அனுமதிக்­கப்­பட்­டார்.

அவ­ரு­டன் தொடர்­பில் இருந்த 40 போலிசாருக்கும் இந்தக் கிருமி பாதிப்பு உள்­ளதா என நேற்று செவ்­வாய் முதல் சுகா­தா­ரத்­துறை அதி­கா­ரி­கள் பரி­சோ­தித்து வரு­கின்­ற­னர். துடி­ய­லூர் ஆரம்ப சுகா­தார மையத்­தில் இந்­தப் பரி­சோ­தனை நடை­பெற்று வருகிறது. அத்துடன் அவ­ரது குடும்­பத்­தி­னர், நண்­பர்­கள் என 120 பேருக்­கும் பரி­சோ­தனை தொடர்கிறது.