சென்னை: முகக்கவசம் அணி யாமல் வெளியே சென்றுவரும் சென்னைவாசிகளிடம் காவல்துறை நேற்று முதல் ரூ.500 அபராதம் வசூலித்து வருகிறது.
"முகக்கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருபவர் களிடம் ரூ.500 அபராதம் வசூ லிக்கப்படுகிறது. நடந்து சென்றா லும் வாகனங்களில் சென்றாலும் முகக்கவசம் அணியாமல் சென்றால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும்," என காவல்துறை அறிவித்துள்ளது.
கோவை, திருப்பூர் மாவட்டங் களிலும் முகக்கவசம் கட்டாயம் என்று அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்தனர்.
சென்னையிலும் முகக் கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது பற்றி சென்னை நகர மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நேற்று வெளியிட்டுள்ள உத்தரவில், "வீடுகளில் இருந்து வெளியே வருபவர்கள் கட்டாயம் அவர்கள் எவ்வளவு நேரம் நடமாடுகிறார் களோ அதுவரையில் முகக் கவசம் அணியவேண்டும்.
"இந்த உத்தரவை மீறினால் அவர்கள் வெளியில் செல்வதற்காக வழங்கப்படும் அனுமதி பாஸ் ரத்து செய்யப்படும். வாகனங்களும் பறி முதல் செய்யப்படும். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது," என கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, பொது இடங்களுக்கு வரும் காவல்துறையினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் முகக்கவசம் அணியவேண்டும் என்று கோவை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணியும் வலியுறுத்தியுள்ளார். முகக்கவசம் அணியாமல் வெளியே வருபவர்கள் மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கவும் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

