குஜராத்துக்கு தலைவலியாக மாறிய நகரம்

குஜராத்துக்கு தலைவலியாக மாறிய நகரம்

1 mins read
a9a614f8-2132-466d-8efa-031d0d3a427d
அகமதாபாத் சந்தையில் நேற்று முன்தினம் காணப்பட்ட கூட்டம். படம்: ஏஎஃப்பி -

அகமதாபாத்: 'ஒரே இடத்­தில் பலர் கூடா­தீர்­கள்; கிரு­மி­யைப் பரப்­பும் ஆபத்தை உரு­வாக்­கா­தீர்­கள்' என பல­முறை கேட்­டுக்­கொண்­டா­லும் மக்­களில் ஒரு­சி­லர் அத­னைக் காதில் வாங்­கிக்­கொள்­வ­தில்லை என்­ப­தற்கு குஜ­ராத்­தின் அக­ம­தா­பாத் நக­ரம் பொருத்­த­மான உதா­ர­ணம். மே 3 வரை ஊர­டங்கு விதிக்­கப்­பட்ட நிலை­யில் நேற்று முன்­ தி­னம் அந்த நக­ரி­லுள்ள சந்­தை­யில் பெருங்­கூட்­டம் கூடியது. பாது­காப்பு இடை­வெ­ளியை அவர்­கள் கடைப்­பி­டிக்­க­வில்லை என்­றும் மக்­க­ளின் அலட்­சி­யத்­தால் கொரோனா கிரு­மிப் பர­வல் சம்­ப­வங்­கள் அதி­க­ரிப்­ப­தா­க­வும் அக­ம­­தா­பாத் நக­ர­மன்ற ஆணை­யர் விஜய் நெஹ்ரா கூறி­னார். குஜ­ராத் மாநி­லத்தின் மொத்த கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­களில் 50 விழுக்காடு அக­ம­தா­பாத்­தில்தான் உள்­ளது என்­றார் அவர். வியா­ழக்­கி­ழமை மட்­டும் இந்­ந­க­ரில் 93 பேரை கிருமி தொற்றியது.