சென்னை: கொரோனா கிருமித் தொற்றின் பாதிப்பால் இறந்து போன மருத்துவர் உடலை அடக்கம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த 20 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்த மருத்துவருக்கு அண்மையில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு வான கரத்தில் உள்ள மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பலியானார்.
இதையடுத்து அவரது உடலை சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள இடுகாட்டில் அடக்கம் செய்வதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரி வித்தனர். அத்துடன் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மீதும் அவர்கள் தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து அவரது உடல் அருகிலுள்ள வேலங்காடு இடு காட்டில் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் மருத்துவரின் உடலை அடக்கம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த 20 பேர் மீது காவல்துறையினர் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர் களைக் கைது செய்தனர்.
இதற்கிடையே இந்தக் கிருமி யால் உயிரிழந்தவர்களின் உடலை எங்கள் ஆண்டாள் அழகர் கல்லூரி வளாகத்திலேயே அடக்கம் செய்துகொள்ளலாம் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையில், "மருத்து வரின் உடலை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த செய்தியைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். மக்கள் பணியாற்றிய ஒரு மருத்துவருக்கே இந்த நிலைமை என்றால் சாமானிய மக்களின் நிலைமையை எண்ணிப் பார்க்கவேண்டும். கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் உடலை அடக்கம் செய்வதால் எந்த பாதிப்பும் இல்லை என அரசும் உலக சுகாதார நிறுவனமும் கூறியும் மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பது வருத்தம் அளிக்கிறது," என்று கூறியுள்ளார்.

