8 மாவட்டங்களில் 4 நாட்களாக புது தொற்று ஏதும் இல்லை

8 மாவட்டங்களில் 4 நாட்களாக புது தொற்று ஏதும் இல்லை

2 mins read
3b8e4195-e27e-4ab1-a707-f45ec197aee5
தென்காசி நகராட்சிப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் வெளியே வர அனுமதி அட்டை வழங்கப்படுகிறது. படம்: ஊடகம் -

சென்னை: இந்­தி­யா­வில் கொரோனா கிரு­மித்­தொற்று பாதிப்பு குறைந்து வரு­வ­தாக கூறப்­படும் நிலை­யில், தமி­ழ­கத்­தில் இது­வரை கொவிட் 19 நோயால் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் எண்­ணிக்கை 1,520ஆக உயர்ந்­துள்­ளது. 17 பேர் இது­வரை உயி­ரி­ழந்­துள்­ள­னர்.

தமி­ழ­கத்­தில் நேற்று முன்­தி­னம் ஒரே நாளில் 43 பேருக்கு தொற்று உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

தமி­ழக மாவட்­டங்­களில் கிரு­மித்­தொற்­றால் அதி­கம் பாதிப்­பட்­டி­ருப்­பது சென்­னை­தான். எனவே அங்கு கொரோனா கிரு­மித்­தொற்­றுப் பர­வா­மல் இருக்க தீவிர நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன.

கடந்த நான்கு நாட்­களில் சேலம், ஈரோடு, கன்­னி­யா­கு­மரி, திரு­வண்­ணா­மலை, நீல­கிரி, கள்­ளக்­கு­றிச்சி, ராணிப்­பேட்டை, திருப்­பத்­தூர் ஆகிய எட்டு மாவட்­டங்­களில் கிரு­மித்­தொற்­றால் ஒரு­வர் கூட பாதிக்­கப்­ப­ட­வில்லை. சென்­னை­யில் நேற்று முன்­தி­னம் ஒரே நாளில் 18 பேருக்கு நோய்த்­தொற்று இருப்­பது உறு­தி­யா­னது.

சென்­னை­யில் பாதிக்­கப்­பட்­டோ­ரின் எண்­ணிக்கை 300ஐ கடந்­துள்­ளது. திருப்­பத்­தூ­ரில் 109, திண்­டுக்­கல்­லில் 76, திரு­வள்­ளூ­ரில் 48, நாகை­யில் 44, விழுப்­பு­ரத்­தில் 36, தூத்­துக்­குடி, திரு­வா­ரூ­ரில் தலா 27, தென்­கா­சி­யில் 26, சிவ­கங்­கை­யில் 12, ராம­நா­த­பு­ரத்­தில் 11, பெரம்­ப­லூ­ரில் 5, அரி­ய­லூ­ரில் 4 பேர் நோய்த்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒருவருக்கு மட்டும் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.

மாநிலம் முழுவதும் ஊரடங்கை மீறி வெளியே சுற்றித் திரிந்த குற்றச்சாட்டின் பேரில் இதுவரை 2.6 லட்சம் வழக்குகள் பதிவாகியுள்ளன. வழக்கு தொடர்பில் கைதான அத்தனை பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும், 2.19 லட்சம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஒரு கோடியே 36 லட்சம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.