தமிழகத்திற்கு உலக சுகாதார நிறுவனம் பாராட்டு

தமிழகத்திற்கு உலக சுகாதார நிறுவனம் பாராட்டு

1 mins read
07698dc7-3008-4804-8f49-e9689c9f3225
கொரோனா கிரு­மித்­தொற்­றில் இருந்து முழு­மை­யாக குண­ம­டைந்­தோர் எண்­ணிக்­கை­யில் தமி­ழ­கம் இரண்­டா­வது இடத்­தில் உள்­ளது என சுகா­தார அமைச்­சர் விஜ­ய­பாஸ்­கர் தெரி­வித்­துள்­ளார். படம்: ஊடகம் -

சென்னை: தமி­ழ­கத்­தில் நோய்த் தடுப்பு நட­வ­டிக்­கை­களை உலக சுகா­தார நிறு­வ­னம் பாராட்­டி­யுள்­ள­தாக சுகா­தார அமைச்­சர் விஜ­ய­பாஸ்­கர் தெரி­வித்­துள்­ளார்.

சென்­னை­யில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அவர், கொரோனா கிரு­மித்­தொற்­றில் இருந்து முழு­மை­யாக குண­ம­டைந்­தோர் எண்­ணிக்­கை­யில் தமி­ழ­கம் இரண்­டா­வது இடத்­தில் உள்­ளது எனக் குறிப்­பிட்­டார்.

கொரோனா கிரு­மித்­தொற்­றுப் பர­வல் தடுப்பு நட­வ­டிக்­கை­களை வைத்து எதிர்க்­கட்­சி­கள் அர­சி­யல் செய்ய வேண்­டாம் என்­றும், எதிர்க்­கட்­சித் தலை­வர் ஸ்டா­லின் மலி­வான அர­சி­யல் செய்­வ­தா­க­வும் அவர் சாடி­னார்.

"ஆந்­திர அரசு வாங்­கிய ரேபிட் கிட் சோத­னைக் கரு­வி­க­ளின் விலை தமி­ழ­கத்தைவிட அதி­கம். ஆந்­திர அரசு ரேபிட் கரு­வி­களை கொள்­மு­தல் செய்­த­தற்கு அம்­மா­நில அரசு எதிர்க்­கட்­சித் தலை­வர் பாராட்­டி­யுள்­ளார். ஆனால் தமி­ழ­கத்­தில் நிலைமை நேர்மாறாக உள்ளது.

"புதுக்­கோட்டை மாவட்­டத்­தில் முதன்முறை­யாக ஒரு­வ­ருக்கு கொரோனா கிரு­மித் தொற்று இருப்­பது உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது," என்­றார் அமைச்­சர் விஜ­ய­பாஸ்­கர்.

ரேபிட் கிட் சோதனை மூலம் தமி­ழ­கத்­தில் சமூ­கத் தொற்று இல்லை என்­பது உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.