இலவசப் பொருட்கள்: 'டோக்கன்' விநியோகம்

இலவசப் பொருட்கள்: 'டோக்கன்' விநியோகம்

1 mins read
9ab021c4-6372-4c81-ab00-0cf7575a7bd5
சென்னையில் உள்ள ஒரு ரேஷன் கடை. கோப்புப் படம் -

சென்னை: மே மாதத்திற்கான அத்தியாவசியப் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் அப்பொருட்களை பெறுவதற்கு ஏதுவாக வீடுதோறும் டோக்கன்கள் விநியோகிக்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கொரோனா கிருமித்தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்தி உள்ளது.

இதையடுத்து மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே அத்தியாவசியப் பொருட்களை இலவசமாக வழங்குகிறது தமிழக அரசு.

இப்­பொ­ருட்­க­ளைப் பெற வீடு வீடாக டோக்­கன் வழங்­கப்­படும் என்­றும் மாநி­லம் முழு­வ­தும் ஏப்­ரல் 24, 25ஆம் தேதி­களில் டோக்­கன் வழங்­கும் பணி நடை­பெ­றும் என்­றும் முதல்­வர் பழ­னி­சாமி தெரி­வித்­துள்­ளார்.

அந்த டோக்­கன்­களில் ரேஷன் பொருட்­கள், வழங்­கப்­படும் நாள், நேரம் ஆகி­யவை குறிப்­பி­டப்­பட்­டி­ருக்­கும் என்று தெரி­வித்­துள்ள அவர், சம்­பந்­தப்­பட்ட குடும்ப அட்­டை­தா­ரர் டோக்­க­னில் உள்ள நாள், நேரத்­தில் பொருட்­கள் வழங்­கப்­படும் கடைக்­குச் சென்று அவற்­றைப் பெற­லாம் என்று கூறி­யுள்­ளார். பொருட்­களை வாங்க வரி­சை­யில் நிற்­கும்­போது சமூக இடை­வெ­ளி­யைக் கடைப்­பி­டிக்க வேண்­டும் என்று தமி­ழக அரசு கேட்­டுக்­கொண்­டுள்­ளது.