அரசு அலுவலகங்கள் மே 3க்குப் பிறகு 33% ஊழியருடன் இயங்கும்

அரசு அலுவலகங்கள் மே 3க்குப் பிறகு 33% ஊழியருடன் இயங்கும்

1 mins read
af6aeeb9-1b02-4d17-b850-d763a598abfe
இந்தியாவில் பல துறைகளிலும் பெரும் சாதனைகளுடன் முதல் மாநிலமாகத் திகழும் தமிழகத்தை ஆசியாவிலேயே தொழில் நடத்த தலைசிறந்த இடமாக ஆக்குவதற்கு இடைவிடா முயற்சிகள் இடம்பெற்று வருவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.  படம்: ஊடகம் -

சென்னை: தமி­ழ­கத்­தில் அரசு அலு­வ­ல­கங்­கள் மே 3ஆம் தேதிக்­குப் பிறகு 33% ஊழி­யர்­க­ளு­டன் இயங்­க­லாம் என்று தமி­ழக அரசு அர­சாணை வெளி­யிட்­டுள்­ளது.

100 நாள் வேலை திட்­டத்­துக்­கும் அனு­மதி அளிக்­கப்­பட்­டுள்­ளது. இந்த வேலை திட்­டத்­தில் மூன்­றில் ஒரு பகு­தி­யி­னர் ஒரு மீட்டர் இடை­வெ­ளி­யு­டன் பணி­யாற்ற வேண்­டும் என்று அறிவு­றுத்­தப்­பட்டு உள்­ளது.

நீர்ப்­பா­ச­னம், அணை­கள், சாலை­கள், செங்­கல் சூளை, குடி­நீர் வினி­யோ­கம், தூய்மைப் பணி­கள், மின்­சாரப் பணி­ ஆகி­ய­வற்றை மேற்­கொள்ள அனு­மதி அளிக்­கப்­பட்­டுள்­ளது. தமி­ழக அர­சின் அனு­மதி கொரோனா கிரு­மித்­தொற்று கட்­டுப்­பாட்டு பகு­தி­க­ளுக்­குப் பொருந்­தாது என­வும் அர­சா­ணை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இத­னி­டையே, தமிழ்­நாட்­டில் கொரோனா கிரு­மித்­தொற்று கார­ண­மாக மூடப்­பட்டு இருந்த தொழிற்­சா­லை­களில் குறிப்­பிட்ட ஆலை­க­ளைக் கட்­டம்­கட்­ட­மாக மறு­ப­டி­யும் திறப்­ப­தற்கு மாநில அரசு அனு­மதி அளித்து இருக்­கிறது.

முதல்­வர் பழ­னி­சாமி நேற்று காணொளி மூலம் தொழில்­துறை தலை­வர்­க­ளு­டன் பேசியதை அடுத்து இந்த முடிவு எடுக்­கப்­பட்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

சுத்­தி­க­ரிப்பு ஆலை­கள், இரும்பு தொழிற்­சா­லை­கள், சிமெண்ட் ஆலை­கள், சாயம் தயா­ரிக்­கும் நிறு­வ­னங்­கள், ரசா­யன ஆலை­கள், கரும்பு ஆலை­கள், டயர் மற்­றும் காகிதத் தயா­ரிப்பு ஆலை­கள் போன்­றவை மறு­ப­டி­யும் செயல்­பட அனு­மதி வழங்கப்­பட்டு இருக்­கிறது.

இவை எல்­லாம் மத்­திய அர­சாங்­கத்­தின் நெறி­மு­றை­க­ளுக்கு ஏற்ப கட்­டம் கட்­ட­மா­கச் செயல்­பட அனு­ம­திக்­கப்­படும் என்றும் குறிப் பிடப்பட்டது. சூழ்நிலைக்கு ஏற்ப இதர ஆலைகளுக்கும் அனுமதி கிடைக்குமென தெரிவிக்கப்பட்டது.