விழுப்புரம்: கொரோனா நிவாரண நிதியை மனதார அதிகம் அள்ளிக் கொடுத்தது ரஜினியா, விஜய்யா என்று இருதரப்பு ரசிகர்கள் வாக்குவாதம் செய்துள்ளனர். இந்த வாக்குவாதம் ேமாதலாக முற்றிப்போக விஜய் ரசிகரை ரஜினி ரசிகர் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விழுப்புரம் மாவட்டம், மரக் காணம், சந்திகாப்பான் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் யுவராஜ், 22. விஜய் ரசிகரான இவர் ஒரு ஆட்டோ ஓட்டுநர். இவரது வீட்டின் அருகில் வசிப்பவர் ஆறுமுகம். இவரது மகன் தினேஷ்பாபு, 22. தொலைக்காட்சியைப் பழுதுபார்ப்ப வரான இவர் ரஜினி ரசிகராவார். இவர்கள் இருவரும் நண்பர்கள்.
ஊரடங்கு உத்தரவு காரணமாக வேலைக்குச் செல்லாத நண்பர்கள் இருவரும் வீட்டிலேயே மது அருந்திவிட்டு பேசிக்கொண்டிருந்தபோது, "என் தலைவர் விஜய்தான் கொரோனா நிதியை அள்ளிக்கொடுத்துள்ளார். ஆனால், உன் தலைவர் கொஞ்சமாக கிள்ளித்தான் கொடுத்துள் ளார்," என கூறியுள்ளார் யுவராஜ்.
இந்த வாக்குவாதம் கைகலப்பாக முற்றியதால் இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். ஒருசமயத்தில் யுவராஜை கீழே தள்ளிய தினேஷ்பாபு, அருகில் கிடந்த ஒரு செங்கல்லை எடுத்து தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.
"என் நண்பனை நானே என் கைகளால் சாகடித்துவிட்டேன். அவன் இல்லாமல் எப்படி இருப்பேன். ரொம்ப நல்லவன் சார் அவன்," என்று கூறி தினேஷ்பாபு கதறி அழுததாக அவரைக் கைது செய்த மரக்காணம் காவல்துறை போலி சார் கூறியுள்ளனர்.

