தாய் சாந்த மீனா: குடும்பத்துக்கு அவப்பெயர் வரக்கூடாது என்றே மகள்களைக் கொன்றேன்

1 mins read
d65219b9-f9ac-4345-bba5-38437470cc58
தன் மகளின் வீட்டில் வைத்தும் தன் வீட்டில் வைத்தும் அச்சிறுமியை அந்த ஆடவர் மானபங்கம் செய்ததாகக் கூறப்படுகிறது. -

திருச்சி: தனது தோளுக்கு மேல் வளர்ந்து ஆளாகியுள்ள மகள்களைப் பற்றி சற்றும் நினைத்துப் பார்க்காத தாய் ஒருவர், தனது குடும்பத்துக்கு அவப்பெயர் எதுவும் வந்து விடக்கூடாது என்ற பயத்திலேயே இரு மகள்களையும் கொன்றதாக காவல்நிலையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை, சமுத்திரம் காந்திநகரைச் சேர்ந்தவர் கட்டடத் தொழிலாளி கனகராஜ். இவரது மனைவி சாந்த மீனா, 40. இவர்களுக்கு லோகநாதன் (15) என்ற மகனும் கோகிலா (13), லலிதா (11) என்ற இரு மகள்களும் உள்ளனர்.

கடந்த திங்­கட்­கி­ழமை சாந்­த­மீனா வேலைக்கு சென்­றி­ருந்த நிலை­யில், சாந்­த­மீ­னா­வின் மகள்­கள் இரு­வ­ரும் மயக்­க­ம­டைந்து விழ அவர்­களை திருச்சி அரசு மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­தித்­த­னர். ஆனால் சிறு­மி­கள் இரு­வ­ரும் உயி­ரி­ழந்­ததை அடுத்து மணப்­பாறை காவல்­நி­லை­யத்­தில் சாந்­த­மீனா சர­ண­டைந்­தார்.

"கூட்­டுக்­கு­டும்­ப­மாக வாழ்ந்து வரும் நிலை­யில், எனது கண­வ­ரின் சகோ­த­ரர் வைத்­தி­ருக்­கும் பணம் அவ்­வப்­போது காணா­மல் போனது. அதனை எனது மகள்­கள்­தான் எடுத்­த­னர். அவற்­றால் எனது குடும்­பத்­திற்கு அவப்­பெ­யர் ஏற்­பட்டு விடும் என்ற அச்­சத்­தால் மகள்­களை குளிர்­பா­னத்­தில் விஷம் கலந்து கொடுத்­துக் கொன்­று­விட்­டேன்," என கைதான சாந்­த­மீனா வாக்­கு­மூ­லம் அளித்­துள்­ளார்.