கைபேசி வெடித்து சிதறியதில் பெண்ணின் பார்வை பாதிப்பு

கைபேசி வெடித்து சிதறியதில் பெண்ணின் பார்வை பாதிப்பு

1 mins read
23b23f47-f946-4f40-a9ff-e480e2c00ada
வெளி­நாட்­டில் வசித்து வரும் தனது தந்­தை­யு­டன் 'வீடியோ கால்' மூலம்  இளம்­பெண்  ஒரு­வர் பேசிக் கொண்­டி­ருந்­த­போது கைபேசி வெடித்­துச் சித­றி­யது. படம்: ஊடகம் -

திரு­வா­ரூர்: வெளி­நாட்­டில் வசித்து வரும் தனது தந்­தை­யு­டன் 'வீடியோ கால்' மூலம் இளம்­பெண் ஒரு­வர் பேசிக் கொண்­டி­ருந்­த­போது கைபேசி வெடித்­துச் சித­றி­யது.

எதிர்­பா­ரா­த­வி­த­மாக நடந்த இந்த சம்­ப­வத்­தால் அவ­ரது பார்வை பாதிக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் தஞ்சை மருத்­து­வக்­கல்­லூரி மருத்­து­வம­னையில் அவருக்கு சிகிச்­சை அளிக்கப்­பட்டு வருவதாகவும் கூறப்­ப­டு­கிறது.

கைபே­சியை சார்­ஜ­ரில் போட்­ட­படி பேசிக்­கொண்­டி­ருந்­த­தால் இந்த விபத்து ஏற்­பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திரு­வா­ரூர் மாவட்­டம், நீடா­மங்க லத்­தைச் சேர்ந்­த­வர் சுகு­மார். இவர் வெளி­நாட்­டில் பணி­பு­ரிந்து வரு கிறார். இவ­ரு­டைய மகள் ஆர்த்தி, 18.

இவர் நேற்று காலை வெளி நாட்­டில் உள்ள தனது தந்தையுடன் 'வீடியோ கால்' மூலம் பேசிக்­கொண்டிருந்­த­போது இந்த விபத்து நேர்ந்தது.

கைபேசியின் உடைந்த பாகங்­க­ளின் துகள்­கள் ஆர்த்­தி­யின் கண்­கள், காது­க­ளுக்­குள் சென்­றதால் பார்வை பாதிக்­கப்­பட்ட நிலை­யில் வலி­யால் துடிதுடித்தார் ஆர்த்­தி. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஆர்த்­தி­யின் குடும்­பத்­தி­னர் அவரை உடன­டி­யாக நீடா­மங்­க­லம் அரசு மருத்­துவமனைக்கு சிகிச்­சைக்­காக அழைத்துச் சென்­ற­னர். அதன் பின்­னர் தஞ்சை மருத்­து­வமனையில் ஆர்த்தி அனுமதிக்கப்பட்டார்.