ஆயிரம் கோடி ரூபாய் நிதி: முதல்வர் கோரிக்கை

ஆயிரம் கோடி ரூபாய் நிதி: முதல்வர் கோரிக்கை

1 mins read

சென்னை: தமி­ழ­கத்­தில் கொவிட் 19 நோயா­ளி­க­ளின் இறப்பு விகி­த­மா­னது 1.2 விழுக்­காடு என்ற அள­வில் கட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக முதல்­வர் பழ­னி­சாமி தெரி­வித்­துள்­ளார்.

மேலும் 1,020 நோயா­ளி­கள் அதா­வது 54 விழுக்­காட்­டி­னர் நோய்த் தொற்­றி­லி­ருந்து குண­ம­டைந்­துள்­ள­தாக பிர­த­மர் மோடி­யு­ட­னான காணொ­ளிப் பதிவு மூலம் நடை­பெற்ற கலந்­தா­லோ­ச­னை­யின்­போது அவர் குறிப்­பிட்­டார்.

கொரோனா கிரு­மித்­தொற்­றுப் பர­வல் தடுப்பு நட­வ­டிக்­கை­க­ளுக்­குத் தேவைப்­படும் கரு­வி­களை வாங்க வேண்­டி­யுள்­ளது என்­றும், இதற்கு தேசியப் பேரி­டர் நிவா­ரண நிதி­யில் இருந்து தமி­ழ­கத்­துக்கு ஆயி­ரம் கோடி ரூபாய் வழங்க வேண்­டும் என்­றும் பிர­த­ம­ரி­டம், முதல்­வர் பழ­னி­சாமி கோரிக்கை விடுத்­தார்.

"தமி­ழ­கத்­தில் இது­வரை 87 ஆயி­ரத்து 605 சளி மாதி­ரி­களை பரி­சோ­தித்­த­தில் 1,885 பேருக்கு கொரோனா இருப்­பது கண்­ட­றி­யப்­பட்­டது. கொரோனா கிரு­மித்­தொற்­றுப் பரி­சோ­த­னைக்­காக 30 அரசு மற்­றும் 11 தனி­யார் சோத­னைக் கூடங்­கள் உள்­ளன. இவற்­றில் நாளொன்­றுக்கு 7,500 மாதி­ரி­க­ளைப் பரி­சோ­தனை செய்ய முடி­யும்," என்­றார் முதல்­வர் பழ­னி­சாமி.

தமி­ழ­கத்­தின் இதர சில தேவை­க­ளுக்­கும் மத்­திய அரசு நிதி ஒதுக்­கீடு செய்ய வேண்­டும் என­வும் அவர் வேண்­டு­கோள் விடுத்­துள்­ளார்.