பச்சை நிற பகுதிகளில் தொழில் தொடங்கலாம்

பச்சை நிற பகுதிகளில் தொழில் தொடங்கலாம்

2 mins read
bd49032c-3610-4737-87a9-687693cfadbf
தமிழகம் முழுவதும் முகக் கவசம், கை கழுவும் மருந்து போன்றவற்றை அதிக விலைக்கு விற்ற 40 மருந்து கடைகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டது. கோப்புப்படம்: ஊடகம் -

சென்னை: தமி­ழ­கத்­தில் கொரோனா பாதிப்பு குறைந்த பச்சை நிறப் பகு­தி­களில் தொழில்­களைத் தொடங்­க­ அரசு தரும் அறி வுரைகளை ஏற்று ஆட்சியர் செயல்படலாம் என்று தமி­ழக முதல்­வர் பழ­னி­சாமி தெரி­வித்­துள்­ளார்.

சென்னை தலை­மைச் செயல கத்­தில் அனைத்து மாவட்ட ஆட்­சி­யர்­க­ளு­ட­னும் காணொளி காட்சி மூலம் பழ­னி­சாமி நேற்று ஆலோ­சனை நடத்­தி­னார்.

அப்­போது பேசிய முதல்­வர், "மக்­கள் வெளி­யில் வரும்­போது தனி­ந­பர் இடை­வெ­ளியைப் பின்­பற்­று­வ­தில்லை. காய்­க­றி­கள் வாங்க சந்­தைக்குச் செல்­லும் மக்­கள் சமூக இடைவெளியைப் பின்­பற்றுவதை ஆட்­சி­யர்­கள் உறுதி செய்­ய­ வேண்­டும்.

"நோய் பாதிப்புள்ள பகு­தி­கள் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என மூன்று வகை­யா­கப் பிரிக்­கப்­பட்டு உள்­ளன. பச்­சைப் பகுதி மாவட்­டத்­தில் படிப்­ ப­டி­யாகத் தொழில்களைத் துவங்க நட­வ­டிக்கை மேற்­கொள்­ள­லாம்.

"சிவப்பு மாவட்­டங்­களை ஆரஞ்சு மாவட்­ட­மா­க­வும் ஆரஞ்சு மாவட்­டங்களை பச்சை மாவட்­ட­மா­க­வும் படிப்­ப­டி­யாக மாற்­ற தீவிர கண்காணிப்பைத் தொடர­வேண்­டும். அப்­போதுதான் எல்லா பகுதி­ க­ளி­லும் தொழிற்­சா­லை­கள் இயங்­க­மு­டி­யும்," என்­று முதல்வர் பழனிசாமி வலி­யு­றுத்தி உள்­ளார்.

கடந்த 14 நாட்­க­ளா­கப் புதி­தாக யாருக்­கும் கொரோனா பாதிப்பு இல்­லாத மாவட்­டங்­கள் ஆரஞ்சு மண்­ட­லம் என்­றும் 28 நாட்­க­ளா­கப் புதி­தாக யாருக்­கும் கொரோனா பாதிப்பு இல்­லாத மாவட்­டங்­கள் பசுமை மண்­ட­லம் என்­றும் அறி விக்­கப்­பட்­டுள்­ளன.

"சென்­னை­யைத் தவிர்த்து மற்ற மாவட்­டத்­தில் கொரோனா கிரு­மித் தொற்­றின் பாதிப்பு குறைந்­துள்­ளது. சென்னை பெரு­ந­க­ரில் மக்­கள் அதி­ க­ம் வசிப்­பதே இதற்கு கார­ணம்.

"குறு­க­லான தெரு­வில் அதிக மக்­கள் வசிக்­கும் கார­ணத்­தால் எளி­தாக நோய் பர­வு­கிறது. கிருமி நாசினியை அனைத்துப் பகுதி களிலும் தெளிக்கவேண்டும். நக­ரப்­ ப­கு­தி­யில் இருக்­கும் கழி வறைகளை மூன்று முறை தின­மும் சுத்­தம் செய்­ய­வேண்­டும்.

"அரசு அறிவிக்கும் வழிமுறை களைப் பின்பற்றினால் இந்த நோய் தொற்று ஒழிக்கப்படும். 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிபவர்கள் 50 வயதுக்கு மேல் இருப்பின் அவர்கள் பணிக்கு வரவேண்டாம்," என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.