தென்காசி: தமிழகத்தில் இம்மாதம் இறுதி வரை பேருந்து, ரயில், விமானச் சேவைகள் இயங்குவதற்கான வாய்ப்பில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் முடங்கிக் கிடக்கும் உள்ளூர் விமானச் சேவையானது வரும் 25ஆம் தேதி திங்கள் முதல் இந்தியாவின் பல மாநிலங்களிலும் மீண்டும் உயிர்பெற உள்ளது.
இந்நிலையில், “இம்மாதம் 31ஆம் தேதி வரை எங்கள் மாநிலத்துக்கு விமானச் சேவைகளை இயக்கவேண்டாம்,” என்று விமா னப் போக்குவரத்து அமைச்சகத் திடம் தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது.
“தமிழகத்தில் வரும் 25ஆம் தேதி முதல் விமானச் சேவையைத் தொடங்கவேண்டாம். ஜூன் மாதத்திற்குப் பிறகு தொடங்கலாம்,” என்று பிரதமர் நரேந்திரமோடிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை நகரில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்படு வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் டாக்சி, வேன் உள்ளிட்ட போக்கு வரத்துக்கான ஏற்பாடுகள் குறை வாக உள்ளதாகவும் தமிழக அரசு சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்கிடையே, “தமிழகத்தில் பொதுப் போக்குவரத்தை அனு மதிப்பது குறித்து மருத்துவ நிபுணர் குழுதான் தீர்மானிக்கும்,’’ என போக்குவரத்துத் துறை ஆணையர் தென்காசி ஜவஹர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பேருந்து போக்குவரத்துக்கும் அனுமதி தரப்படாமல் உள்ளது.
இைதயடுத்து டாக்சி, ஆட்டோ ஓட்டுநர்கள் பொதுப் போக்குவரத்தை அனுமதிக்கவேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி வருகின்றனர்.
“தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பொதுப் போக்குவரத்தை அனு மதிப்பதில் சிக்கல் நீடிக்கிறது. பேருந்து, டாக்சி உள்ளிட்ட வாடகை வாகனங்களின் போக்கு வரத்தை அனுமதிப்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் குழுதான் அறிவிக்கும் என அரசு தெரிவித் துள்ளது.
“அதனால் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மருத்துவக் குழு அளிக்கும் அறிக்கையைப் பொறுத்துதான் அரசு நெறிமுறை களை வகுக்கும் என எதிர்பார்க்கி றோம்,” என்று ஜவஹர் கூறினார்.
அத்துடன், கலந்துரையாட லின்போது பிரதமர் மோடியிடம் பழனிசாமி வரும் 31ஆம் தேதி வரை தமிழகத்திற்கு ரயில்கள் விடவேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளதால் அந்த தேதி வரையிலும் ரயில் சேவை தமிழகத்தில் துவங்கப்படாது எனவும் தமிழக ஊடகத் தகவல்கள் தெரிவித்துள்ளன.