ஆர்.எஸ்.பாரதி கைதுக்கு கண்டனம், ஆதரவு; தமிழக அரசுக்கு சம்பந்தமில்லை என மறுப்பு ஜூன் 1 வரை இடைக்கால பிணை

சென்னை: சென்னை எழும்­பூர் நீதி மன்­றத்­தில் முன்­னி­லைப்­ப­டுத்­தப் பட்ட ஆர்.எஸ். பார­திக்கு ஜூன் 1 வரை இடைக்­கால பிணை அளித்து நீதி­பதி செல்­வ­கு­மார் உத்­த­ர­விட்­டார்.

திமுக அமைப்­புச் செய­லா­ள­ரும் மாநி­லங்­க­ளவை உறுப்­பி­ன­ரு­மான ஆர்.எஸ்.பார­தியை நேற்று அதிகாலை ஆலந்­தூ­ரில் உள்ள அவ­ரது வீட்­டில் போலிசார் கைது செய்­த­னர்.

இதன்­பின்­னர் செய்­தி­யா­ளர் களி­டம் பேசிய பாரதி கூறு­கை­யில், “நான் பேசி­யது சமூக ஊட­கங்­களில் திரித்­துக் கூறப்­பட்­டுள்­ளது.

“கோவை­யில் கொரோனா தடுப்­புப் பொருட்­கள் வாங்­கி­ய­தில் ரூ.200 கோடிக்கு ஊழல் நடந்­துள்ளதாக துணை முதல்­வர் ஓ.பன்­னீர் செல்­வம் மீது புகார் அளித்­தேன்.

“இந்­நி­லை­யில் யாரையோ திருப்திப்­ப­டுத்­து­வ­தற்­காக என் மீது இந்த நட­வ­டிக்­கையை எடுத்­துள்­ள­னர்.

“இதற்­கெல்­லாம் பயந்­து­விட மாட்­டோம். கொரோனா விவ­கார ஊழல் பற்றி தொடர்ந்து புகார் அளிப்­போம்,” என்று கூறி­னார்.

கடந்த பிப்­ர­வரி 15ஆம் தேதி பட்­டி­ய­லின மக்­களை அவ­ம­திக்­கும் வகை­யில் பாரதி பேசி­ய­தாக சர்ச்சை எழுந்­ததை அடுத்து, அவர் வருத்­தம் தெரி­வித்­தார்.

இந்­நி­லை­யில் ஆதித்­த­மி­ழர் மக்­கள் கட்­சித் தலை­வர் கல்­யாண் குமார் அளித்த புகா­ரின் அடிப்­படை யில் பாரதி கைது செய்­யப்­பட்­ட­தாக போலி­சார் கூறி­னர்.

ஆர்.எஸ். பாரதி கைதுக்கு பல்­வேறு தலை­வர்­களும் கண்­ட­னம் தெரி­வித்­துள்ள நிலை­யில், இந்த கைது நட­வ­டிக்­கையை வர­வேற்ப தாக பாஜக தேசிய பொதுச் செய லாளர் எச்.ராஜா தெரி­வித்­துள்­ளார்.

பார­தியை அடுத்து காத்­தி­ருப்பு பட்­டி­ய­லில் தயா­நி­தி­மா­றன் உள் ளாரா? என்­றும் கேட்­டுள்­ளார்.

திமுக தலை­வர் மு.க. ஸ்டா­லின் தனது டுவிட்­டர் பக்­கத்­தில், “கொரோனா கிரு­மி­யைப் பர­வா­மல் தடுப்­ப­தில் தமி­ழக அரசு தோல்வி அடைந்­துள்­ளதை மூடி மறைக்­கவே இந்த கைது நட­வ­டிக்கை எடுக்­கப் பட்­டுள்­ளது.

“இது­போன்ற நள்­ளி­ரவு கைது நாட­கங்­க­ளைப் பார்த்து ஒரு­போ­தும் திமுக மிர­ளாது,” என்று குறிப் பிட்­டுள்­ளார்.

பார­தி­யைக் கைது செய்­த­தன் மூலம் எதிர்க்­கட்­சி­க­ளின் குரல் வளையை நெரிக்­க­லாம் என அதி­முக அரசு மனப்­பால் குடித்து வரு­வ­தாக மதி­முக பொதுச் செய லாளர் வைகோ கூறி­யுள்­ளார்.

உயர் நீதி­மன்ற நீதி­ப­தி­கள் குறித்து அவ­ம­திக்­கும் வகை­யில் கீழ்த்­த­ர­மான சொல்­லைப் பயன்­ப­டுத்­திய பாஜ­க­வின் தேசிய செய­லா­ளர் எச்.ராஜாவை அதி­முக அரசு கைது செய்­ததா என கேள்வி எழுப்­பி­யுள்ள திரா­விட கழ­கத் தலை­வர் கி.வீர­மணி, இது ஒரு மனி­தா­பி­மா­ன­மற்ற நட­வ­டிக்கை என்­றார்.

இதற்­கி­டையே பாரதி கைதுக்­கும் தமி­ழக அர­சுக்­கும் எந்த சம்­பந்­த­மும் இல்லை, சட்­டத்­தின் அடிப்­ப­டை­யி­லேயே நட­வ­டிக்கை எடுக்­கப்பட்­டுள்­ளது என்று தமி­ழக முதல்­வர் கே.பழ­னி­சாமி விளக்கம் தந்துள்ளார்.

கொரோனா தடுப்புப் பொருட்கள் வாங்கியதில் ரூ.200 கோடிக்கு ஊழல் நடந்துள்ளதாக துணை முதல்வர் மீது புகார் அளித்தேன். இதனால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சீப்பை மறைத்துவிட்டால் கல்யாணம் நிற்காது. ஊழல் குறித்த புகார் விடாமல் தொடரும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!