சென்னை: கொரோனா ஊரடங்கு உத்தரவால் முடக்கப்பட்டிருந்த தொழிற்பேட்டைகள் பொதுமக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, மீண்டும் இன்றுமுதல் உயிர்பெற உள்ளன.
சென்னையில் கிண்டி, அம்பத் தூர் உள்ளிட்ட இடங்களைச் சேர்ந்த 17 தொழிற்பேட்டைகள் உடனடியாக செயல்படுவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்த தொழிற்பேட்டைகளில் 25% தொழிலாளர்கள் மட்டுமே பணிபுரிய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று வெளி யிடப்பட்டது.
தொழிற்பேட்டைகளில் கடைப் பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து தமிழக அரசு உத்தரவு களைப் பிறப்பித்துள்ளது.
தொழிலாளர்களின் உடல்வெப்ப நிலையை தினமும் சோதிக்க வேண்டும். தொழிற்பேட்டைகளில் பணி புரியும் தொழிலாளர்கள் அனைவரும் முகக்கவசம், கையுறை கட்டாயம் அணியவும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவும் வேண்டும்.
தினமும் காலை, மாலையில் தொழிற்சாலையை கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்த வேண்டும்.
தொழிற்சாலையில் உள்ள கழி வறையை தினமும் 2 மணி நேரத்திற்கு ஒருமுறை கிருமி நாசினியைக் கொண்டு சுத்தம் செய்வதை உறுதி செய்யவேண்டும்.
சோப்பு, கிருமி நாசினி பயன் படுத்தி அடிக்கடி கைகளைக் கழுவும் நடைமுறையைப் பின்பற்ற வேண்டும்.
55 வயதுக்கு மேற்பட்ட தொழி லாளர்கள் பணிக்கு வருவதைத் தவிர்க்கவேண்டும்.
தொழிலாளர்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் விடுப்பு அளிக்கவும் அரசு அறிவுறுத்தி உள்ளது.