9 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சி: சாதித்த 2வது கட்சி அதிமுக

சென்னை: தமிழ்­நாட்­டில் காங்­கி­ரஸ் கட்­சிக்­குப் பிறகு தொடர்ந்து அதிக காலம் பதவி வகிக்­கும் கட்சி என்ற சாத­னையை அதி­முக நிகழ்த்தி இருக்­கிறது.

அதி­முக அர­சாங்­கம் இப்­போதைய பதவிக் காலத்­தின் ஐந்­தா­வது ஆண்­டில் சனிக்­கி­ழமை காலடி எடுத்து வைத்­தது. அந்த அரசு தொடர்ந்து ஒன்­பது ஆண்டு­களுக்­கும் அதிக காலம் பதவி வகித்து வரு­கிறது.

தமி­ழ­கத்­தில் தொடர்ந்து 20 ஆண்­டு­கா­லம் பதவி வகித்­துள்ள கட்சி காங்­கி­ரஸ் கட்சி என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. அதி­முக, 2011 மே 16ஆம் தேதி நடந்த தேர்­த­லில் ஆட்­சி­யைப் பிடித்­தது. நான்­கா­வது தட­வை­யாக ஜெய­ல­லிதா முதல்­வரா­கப் பதவி ஏற்­றுக்­கொண்­டார்.

2016 மே மாதம் நடந்த சட்­ட­மன்­றத் தேர்­த­லில் மீண்­டும் அதிமுக வென்­றது. ஜெய­ல­லிதா 2016 மே 23ஆம் தேதி ஆறா­வது தட­வை­யாக முதல்­வர் பத­வியை ஏற்­றுக்­கொண்­டார். அது முதல் அதி­முக ஆட்சி நடந்து வரு­கிறது.

இப்போது மேலும் ஓர் ஆண்டு பத­விக்­கா­லம் எஞ்சி இருக்­கிறது. 2016 டிசம்­ப­ரில் ஜெய­ல­லிதா மறை­வுக்­குப் பிறகு ஓ. பன்­னீர்­செல்­வம் மூன்­றா­வது முறை­யாக முதல்­வர் பத­வியை ஏற்று 2017 பிப்­ர­வரி 15 வரை அந்­தப் பத­வியை வகித்­தார். அதற்­குப் பிறகு முதல்­வ­ரான எடப்­பாடி பழ­னி­சாமி இன்­ன­மும் அந்­தப் பத­வி­யில் தொடர்ந்து வரு­கி­றார்.

அதி­மு­கவை தொடங்­கிய எம்ஜிஆர், 1977ல் ஜூன் மாதத்­திற்­கும் 1987 டிசம்­ப­ருக்­கும் இடை­யில் முதல்­வ­ராக பதவி வகித்­தார். என்­றா­லும் 1980 பிப்­ர­வரி முதல் ஜூன் வரை தமி­ழ­கத்­தில் அதி­முக ஆட்சி நடக்­க­வில்லை. அப்­போது அதி­பர் ஆட்சி நடந்­தது.

இதற்­கெல்­லாம் முன்­பாக 1946 மார்ச்-ஏப்­ரல் மாதங்­களில் தமி­ழ­கத்­தில் நடந்த சட்­ட­மன்­றத் தேர்­த­லில் காங்­கி­ரஸ் கட்சி ஆட்­சி­யைப் பிடித்­தது. 1967 மார்ச் வரை காங்­கி­ரஸ் ஆட்சி தொடர்ந்­தது. 1967ல் திமுக ஆட்­சிக்கு வந்­தது.

1946 முதல் 1952 வரை டி. பிர­கா­சம், ஓமந்­தூர் பி. ராம­சாமி ரெட்­டி­யார், பி.எஸ் குமா­ர­சாமி ராஜா ஆகி­யோர் முதல்­வர்­க­ளா­கப் பதவி ஆற்­றி­னர். சுதந்­தி­ரத்­திற்­குப் பிறகு 1952 பிப்­ர­வ­ரி­யில் முதல் சட்­ட­மன்­றத் தேர்­தல் நடந்­தது.

அதில் வெற்றி பெற்ற காங்­கிரஸ் அடுத்த 15 ஆண்­டு­களில் ராஜாஜி, காம­ரா­ஜர், பக்­த­வக்­ச­லம் ஆகி­யோரை முதல்­வ­ராக்­கியது.

பிறகு 1967 மார்ச் மாதம் பத­வி­யைப் பிடித்த திமுக 1976 வரை பதவி வகித்­தது.

இடை­யில் 1971 மார்ச்­சில் சட்­ட­மன்­றத் தேர்­தல் நடந்­தது. அந்­தக் கால­கட்­டத்­தில் சி.என். அண்­ணா­து­ரை­யும் மு. கரு­ணா­நி­தி­யும் முதல்­வர்­க­ளாக இருந்­தனர். ­

பிறகு 1989 முதல் 2011 வரை திமுக அல்­லது அதி­முக ஆட்சி பதவி வகித்­தது. இந்­தப் போக்கு 2016ல் முடி­வுக்கு வந்­தது.

இத­னி­டையே, அடுத்த ஆண்டு நடக்­க­வி­ருக்­கும் தேர்­த­லில் ஆட்சி­யைத் தக்­க­வைத்­துக்­கொள்ள அதி­மு­க­வும் மறு­ப­டி­யும் ஆட்­சி­யைப் பிடிக்க திமு­க­வும் மும்முரமாக முயன்று வரு­கின்­றன.

இதற்­கான வியூ­க­மாக போட்டி போட்­டுக்­கொண்டு அர­சி­யல் ஆலோ­ச­கர்­க­ளைக் அவை களம்­இறக்­கு­கின்­றன.

திமுகவின் தேர்தல் வியூக ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதிமுகவின் தேர்தல் ஆலோசகராக சுனில் நியமிக்கப்பட்டுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!