மோதிய காரின் மேலேயே தூக்கி வீசப்பட்டார்

சென்னை: காரும் மோட்டார்சைக்கிளும் மோதிக்கொண்ட விபத்தில் மோட்டார்சைக்கிளோட்டி காரின் மேலேயே தூக்கி வீசப்பட்ட சம்பவம் சென்னையில் நிகழ்ந்தது.

மோட்டார்சைக்கிளை ஓட்டி வந்த இளையர், தமது காரின் மீது விழுந்து கிடந்தது தெரியாமல், தப்பிக்கும் நோக்கில் ஒரு கிலோமீட்டர் தொலைவுக்கு காரை ஓட்டிச் சென்றவரை போலிசார் விரட்டிப் பிடித்து கைது செய்தனர். காரின் மேலே இருந்த இளையர் மீட்கப் பட்டார்.

அயப்பாக்கத்தைச் சேர்ந்த ரஞ்சித் குமார் என்பவர் ஓட்டிச் சென்ற மோட்டார்சைக்கிளும் விருகம்பாக்கத்தைச் சேர்ந்த கணேசமூர்த்தி என்பவரது காரும் நேற்று முன்தினம் இரவு சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையில் மோதிக்கொண்டன.

விபத்து ஏற்படுத்தியது, தப்ப முயற்சி செய்தது ஆகிய பிரிவுகளின் கீழ் கணேசமூர்த்தி மீது போலிஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.

விபத்தில் காயமடைந்த ரஞ்சித் குமாருக்குக் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் அவர் இப்போது சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!