துப்புரவுப் பணியாளர்களுக்கு மரியாதை செய்த மணமக்கள்

பொள்ளாச்சி: கொவிட்-19 கிருமித்தொற்றுச் சூழலில் எளிமையாக மணமுடித்துக் கொண்ட இருவர், ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை வழங்கி துப்புரவுப் பணியாளர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.

பொள்ளாச்சியைச் சேர்ந்த விக்டர் எனும் நிர்மல், காரைக்காலைச் சேர்ந்த லியோனி லிடியாமேரி ஆகிய இருவருக்கும் நேற்று திருமணம் நடந்தது.

இந்நிலையில், கொரோனா தடுப்பில் முன்னின்று பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்களுக்கு மரியாதை செலுத்த வேண்டுமென புதுமணத் தம்பதியர் விரும்பினர்.

அதன்படி, நூற்றுக்கும் மேற்பட்ட துப்புரவுப் பணியாளர்களை நேற்று வீட்டிற்கு வரவழைத்து விருந்து படைத்ததோடு அரிசி, பருப்பு, மளிகைப் பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களையும் அவர்களுக்கு வழங்கினர்.

ஆடம்பரத்தைத் தவிர்த்து, துப்புரவுப் பணியாளர்களுக்கு உதவியது மகிழ்ச்சியும் மனநிறைவும் அளித்ததாக மணமக்களும் அவர் களின் பெற்றோரும் கூறினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!