பொள்ளாச்சி: கொவிட்-19 கிருமித்தொற்றுச் சூழலில் எளிமையாக மணமுடித்துக் கொண்ட இருவர், ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை வழங்கி துப்புரவுப் பணியாளர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.
பொள்ளாச்சியைச் சேர்ந்த விக்டர் எனும் நிர்மல், காரைக்காலைச் சேர்ந்த லியோனி லிடியாமேரி ஆகிய இருவருக்கும் நேற்று திருமணம் நடந்தது.
இந்நிலையில், கொரோனா தடுப்பில் முன்னின்று பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்களுக்கு மரியாதை செலுத்த வேண்டுமென புதுமணத் தம்பதியர் விரும்பினர்.
அதன்படி, நூற்றுக்கும் மேற்பட்ட துப்புரவுப் பணியாளர்களை நேற்று வீட்டிற்கு வரவழைத்து விருந்து படைத்ததோடு அரிசி, பருப்பு, மளிகைப் பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களையும் அவர்களுக்கு வழங்கினர்.
ஆடம்பரத்தைத் தவிர்த்து, துப்புரவுப் பணியாளர்களுக்கு உதவியது மகிழ்ச்சியும் மனநிறைவும் அளித்ததாக மணமக்களும் அவர் களின் பெற்றோரும் கூறினர்.