சென்னை: கோயம்பேடு மொத்த காய்கறிச் சந்தைக்குப் பதிலாக சென்னைப் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள திருமழிசை சந்தையில் தினந்தோறும் 2 லட்சம் கிலோ மதிப்புள்ள காய்கறிகள் வீணாகின்றன.
இதைத் தடுக்க அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக, காய்கறிகளை சேமித்து வைக்க போதுமான வசதி இல்லை என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா கிருமித்தொற்றுப் பரவலுக்கு கோயம்பேடு சந்தையும் முக்கிய காரணமாகிவிட்டது. இதையடுத்து காய்கறிச் சந்தை திருமழிசைக்கு மாற்றப்பட்டது. இச்சந்தைக்கு தினமும் 500 லாரிகளில் காய்கறிகள் வருகின்றன. எனினும் ஊரடங்கு காரணமாக தேவை குறைந்துள்ளதால் காய்கறிகள் விற்காமல் தேங்கிப் போகின்றன.
அவற்றைப் பாதுகாக்க திருமழிசை பகுதியில் போதுமான கிடங்குகள் இல்லாததால் காய்கறிகள் தினமும் வீணாவதாக வியாபாரிகள் புலம்பி வருகின்றனர்.