சென்னை: தமிழகத்தில் நாளை ஜூன் 1 முதல் கொரோனா கிருமித் தொற்றால் அதிகம் பாதிக்கப்படாத மாவட்டங்களுக்கு இடையே நான்கு சிறப்பு ரயில்கள் இயங்கு வதற்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த ரயில் பயணங்களுக்கான முன்பதிவு நேற்று மாலை தொடங்கியது. ஆனால், இந்தச் சேவை கொரோனா பாதிப்பை அதிகம் எதிர்நோக்கும் சென்னைக்கு மட்டும் கிடையாது எனவும் ரயில்வே வாரியம் கூறியுள்ளது.
கொரோனா கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நடப்பில் இருந்து வரும் ஊரடங்கு உத்தரவு இன்றுடன் முடிவடைகிறது.
இந்நிலையில், நாளை முதல் நாடு முழுவதும் ரயில் சேவை தொடங்க உள்ளது.
இதையடுத்து, தமிழகத்திலும் 4 பயணிகள் ரயில்களை இயக்கு வதாக தென்னக ரயில்வே அறி வித்துள்ளது.
அதன்படி கோவை-மயிலாடு துறை-கோவை, மதுரை-விழுப்புரம்-மதுரை, திருச்சி- நாகர்கோயில்-திருச்சி, கோவை-காட்பாடி-கோவை உள்ளிட்ட நான்கு வழித்தடங்களில் ரயில்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, பொதுப் போக்கு வரத்துக்கு அரசு அனுமதி அளிக்கும்பட்சத்தில் பயணிகள் சமூக இடைவெளியைப் பின்பற்றி பயணம் செய்வதற்கு வசதியாக அரசுப் பேருந்துகளின் இருக்கைகளில் சமூக இடைவெளிக்கான ‘ஸ்டிக்கா்’ ஒட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
நாளை முதல் பொதுப் போக்கு வரத்துக்கு அரசு அனுமதி அளித்தால் பேருந்துகளை இயக்கத் தயார் நிலையில் இருக்குமாறும் போக்கு வரத்து அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனா்.
சென்னை மாநகரப் போக்கு வரத்துப் பிரிவில் 50% பராமரிப்பு, பழுது நீக்கும் பணிக்கு தொழில் நுட்பப் பணியாளர்கள் பணிக்கு வரவும் உத்தரவிடப்பட்டுள்ளது.