சென்னை: சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா கிருமி தொற்றிய 400க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்களில் ஐவர் அடுத்தடுத்து இந்த மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடியுள்ள நிலையில், இருவர் கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.
தப்பியோடிய மூவரால் நோய் பரவும் அபாயம் அதிகம் உள்ளதால் அவர்களைப் போலிசார் தேடி வரு கின்றனர்.
ஒரு ஆளை அவனது தனிைமயே கொன்றுவிடும் என்று கூறு வதற்கேற்ப, அண்மையில் கொரோனா கிருமித்தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட ஐந்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் தங்களது உயிரை மாய்த்துக்கொண்டனர்.
தனிமைப்படுத்தப்பட்டதன் காரணமாக பலர் மனரீதியாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். அத னால் சிகிச்சையில் இருந்து தப்பிச் செல்வது தொடர்ந்து வருகிறது.
அதன்படி, இந்த மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த 57 வயது ஆடவர், மே 28ஆம் தேதி இரவு தப்பிச்சென்றார்.
அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்த 63 வயது முதியவர், மே 29ஆம் தேதி தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
தப்பியவர்களைத் தேடும் நடவடிக்கையை போலிசார் முடுக்கி விட்டுள்ளனர்.