மதுரை: மதுரை பகுதியில் மோகன், 47, என்ற சிகை அலங்கார கடைக்காரர் தன் மகளின் படிப்புக்காக சேர்த்து வைத்திருந்த ரூ. 5 லட்சம் பணத்தைக் கொண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு ஏராள உதவிகளைச் செய்து வருகிறார்.
தன் சொத்து, குடும்ப நகைகளை விற்றும் மக்களுக்கு உதவத் தயாராக இருப்பதாகவும் இவர் தெரிவித்து உள்ளார்.
மோகனின் இந்த அரிய, மனிதாபிமான உதவியை உலகமே பாராட்டி வருகிறது. இந்நிலையில் நேற்று நாட்டு மக்களிடம் வானொலியில் ஆற்றிய மனதின் குரல் (மன் கி பாத்) நிகழ்ச்சியில் திரு மோகனைப் பிரதமர் மோடி மனதாரப் பாராட்டினார்.