சென்னை: தமிழகத்தில் சுமார் 68 நாட்களுக்குப் பிறகு பேருந்து, ரயில் போக்குவரத்துகள் நேற்று முதல் இயங்கத் தொடங்கி உள்ள தால் மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு மெல்லத் திரும்பத் தொடங்கி உள்ளனர்.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களைத் தவிர தமிழகம் எங்கும் பேருந்து, ரயில் போக்குவரத்து சேவைகள் இயங்கத் தொடங்கின.
அத்துடன் அனைத்து பெரிய கடைகளைத் திறக்கவும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில், “இரு மாதத் துக்குப் பிறகு பேருந்து சேவை தொடங்கி உள்ளதை வரவேற்கி றோம். இச்சேவைகள் நிறுத்தப்படா மல் இன்னும் கூடுதல் பாதுகாப் புடன் இயக்கப்படவேண்டும்.
“இப்போது முன்பைக் காட்டிலும் அதிகளவில் கிருமித்தொற்று பரவி வருகிறது. இருப்பினும் மீண்டும் பழையபடி பேருந்து போக்குவரத்தை நிறுத்திவிடாமல் உரிய பாதுகாப்பு டன் தொடர்ந்து இச்சேவைகளை வழங்கவேண்டும்,” என பயணிகள் தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கொரோனா கிருமித் தொற்று மேலும் பரவாமல் தடுக்கும் வகை யில் தமிழகத்தில் இம்மாதம் 30ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை முதல்வர் பழனிசாமி நீட்டித்து அறிவித்துள்ளார்.
அதன்படி நான்கு மாவட்டங்களைத் தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் 50% பேருந்து கள் 60% பயணிகளுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
காய்ச்சல், இருமல் உள்ளவர்களுக்கு பேருந்தில் அனுமதி இல்லை என்றும் பொது இடங்களில் எச்சில் துப்பினால் அபராதத்துடன் தண்டனை விதிக்கப்படும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், தெற்கு ரயில்வே சார்பில் தமிழகத்தில் நான்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இந்த ரயில்கள் மதுரையில் இருந்து விழுப்புரத்திற்கும் திருச்சியில் இருந்து நாகர்கோவிலுக்கும் கோவையில் இருந்து மயிலாடுதுறை, காட்பாடிக்கும் சேவை வழங்கின.
முகக்கவசம் அணிந்திருந்தால் மட்டுமே பயணிகள் பேருந்துகளில் பயணம் செய்ய அனு மதிக்கப்படுகின்ற னர். 52 இருக்கைகள் கொண்ட பேருந்து களில் 31 பயணிகள் மட்டுமே பயணம் செய்யலாம். முதல் நாள் என்பதால் குறைந்த அளவிலான பயணிகள் மட்டுமே சேலம் மத்திய பேருந்து நிலை யத்திற்கு வருகை புரிந்தனர்.
படம்: ஊடகம்