ராயபுரம்: சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் ராயபுரத்தில்தான் அதிகமானோர் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு இதுவரை 2,935 பேருக்கும் கோடம்பாக்கத்தில் 1,867 பேருக்கும் தண்டையார்பேட்டையில் 1,839 பேருக்கும் கொரோனா கிருமித் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி மொத்தம் 23,495 பேர் இக்கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 13,170 பேர் குணமடைந்துள்ளனர். 10,138 பேர் சிகிச்சை பெற்று வரு கின்றனர். 184 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை,கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 13 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.