சென்னை தியாகராயநகரில் இதுவரை மூடப்பட்டிருந்த பெரிய ஜவுளிக்கடைகள், செருப்புக் கடைகள், கவரிங் நகைக்கடைகள், தங்க நகைக்கடைகள், பாத்திரக்கடைகள் உள்ளிட்ட கடைகள் ஜூன் 1 முதல் திறக்கப்பட்டு விற்பனை நடந்து வருகிறது. தமிழக அரசின் அறிவுரையின்படி குளிர்சாதன இயந்திரம் இயக்கப்படாமல் 50% ஊழியர்களுடன் மட்டுமே இக்கடைகள் செயல்பட்டன. கடைக்கு உள்ளே செல்லும்போது வாடிக்கையாளர்களின் கைகளில் கிருமி நாசினி திரவம் தெளிக்கப்படுகிறது. இதேபோல் பாரிமுனை, வண்ணாரப்பேட்டை, பெரம்பூர், புரசைவாக்கம் உள்ளிட்ட இடங்களிலும் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டன.
படம்: ஊடகம்