சென்னை: வெளிநாடுகளிலிருந்தும் வெளி மாநிலங்களிலிருந்தும் தமிழகம் வரும் பயணிகளுக்கு கட்டாயம் கொரோனா கிருமித் தொற்று சோதனை நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏற்கெனவே விமானங்களில் பயணம் செய்வோருக்கு தமிழக அரசு வழிகாட்டி நெறிமுறைகளை வழங்கியுள்ளது.
இந்த நிலையில் சென்னையில் இருந்து தமிழகத்தின் பிற பகுதி களுக்கும் தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கும் செல்வோருக்கான வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழக அரசு இணையத்தளம் வழியே ‘இ-பாஸ்’ பெற்றவர்கள் மட்டுமே விமானத்தில் ஏற அனுமதிக்கப்படுவர். இரு தினங்களுக்கு முன் எடுக்கப்பட்ட கொரோனா கிருமித் தொற்று சோதனையில் தொற்று இல்லை என்பது தெரியவந்தால் அவருக்கு பரிசோதனை தேவையில்லை. அலுவல் வேலை காரணமாக வெளியூர் சென்று விட்டு, 48 மணி நேரத்தில் திரும்பு வோருக்கு தனிமைப்படுத்துதல் தேவையில்லை. மற்றவர்கள், ஏழு நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்.
தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு செல்லும் பயணிகள் வெப்பநிலை பரிசோதனைக்குப் பின் விமானத்தில் செல்ல அனுமதிக்கப்படுவர். நோய் அறிகுறி இருந்தால் பயணம் செய்ய அனுமதி இல்லை. எந்த மாநிலத்திற்கு பயணிகள் செல்கிறார்களோ அந்த மாநில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். வெளிநாடுகளில் இருந்து வருவோர் அனைவருக்கும் கொரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
கிருமித்தொற்று இருந்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும். கிருமித்தொற்று இல்லை யென்றாலும் ஏழு நாட்களுக்கு பின் மறுபரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அனைத்து பயணிகளின் கைகளிலும் தனிமைப்படுத்துவதற்கான முத்திரை குத்தப்படும் என்று தமிழக அரசு கூறியுள்ளது.