சென்னை: சென்னையில் கிருமிப் பாதிப்பு உச்சக்கட்டத்தில் இருப்ப தால் தினமும் 4,000 பேருக்கு கிருமித்தொற்று பரிசோதனை நடத்தப்படுகிறது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரி வித்துள்ளார்.
அதே சமயத்தில் தமிழக அரசின் அறிவுரைகளை மக்கள் பின்பற்றி நடந்தால் சென்னையில் கொரோனா வைக் கட்டுப்படுத்த முடியும் என்று அவர் கூறியுள்ளார்.
சென்னையில் கடந்த மூன்று நாட்களாக கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண் ணிக்கை தினமும் 800க்கும் மேல் பதிவாகி வருகிறது.
இந்த நிலையில் சென்னையில் மட்டும் தினமும் 4,000 பேருக்கு கிருமித் தொற்று சோதனை நடத்தப்படுகிறது.
இந்தக் கணக்குப்படி தினமும் 4,000 பேர் பரிசோதிக்கப்பட்டதில் 800 பேருக்கு கிருமித் தொற்று இருப்பது உறுதி செய்யப்படுகிறது. பரிசோதனை செய்யப் பட்டவர்களில் ஐவரில் ஒருவருக்கு கிருமித்தொற்று உள்ளது.
இது, கிருமி வேகமாக பரவுவதைக் காட்டுகிறது.
சென்னை ராயபுரம் பகுதியில் மட்டும் கிருமித் தொற்று 3,000த்தை நெருங்கி வரு கிறது. சென்னையில் உள்ள இதர ஐந்து மண்டலங்களிலும் கிருமித் தொற்று எண்ணிக்கை 2,000த்தை நோக்கி கூடி வருகிறது. கோடம்பாக்கத்தில் 1,867 பேர், தண்டையார்பேட்டையில் 1,839 பேர், தேனாம் பேட்டையில் 1,770 பேர், திரு.வி.க. நகரில் 1,651 பேர், அண்ணாநகரில், 1,341 பேர் என ஐந்து மண்டலங்களில் பாதிப்பு எண்ணிக்கை, 2,000த்தை நோக்கி நகர்கிறது.
இந்தியாவில் கிருமிப் பாதிப்பு கணிசமாக உள்ள மாநிலங்களில் தமிழகமும் ஒன்று.